வடகொரியாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் மேலும் ஒரு பெலெஸ்ரிக் வகையான ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.
இந்தநிலையில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் தென் கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில். இந்த பரிசோதனை வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்காவின் யுத்த கப்பல் ஒன்று தென்கொரிய கடற்பிராந்திற்கு சென்றுள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணையொன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories