விசேட ஆணையாளரின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள்: நாளை கலந்துரையாடல்!

Sunday, 19 March 2023 - 19:54

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21
விசேட ஆணையாளரின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக அலகுகளை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில், நாளைய தினம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தமது கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களுடன், இடம்பெற்ற சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், நிதி கிடைக்கப் பெறுமாறுயின் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.






Exclusive Clips