துறைமுக நகர் கொலை சம்பவ சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!

Monday, 20 March 2023 - 17:40

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
கொழும்பு துறைமுக நகரில் வைத்து இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுக நகரில் கல்கிஸ்ஸ பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட நபருடைய காதலி அவரின் முன்னாள் காதலனுடன் இணைந்து இந்த கொலையை செய்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips