டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்ய உத்தரவு

Thursday, 23 March 2023 - 14:52

%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமையுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் மனுதாரர தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய குறித்த வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதன் பின்னரே இராஜாங்க அமைச்சர் டயனா கமேகவை கைது செய்யுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை பரிசீலிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிக்க முடியும் எனவும் கொழும்ப பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips