நடாஷா - புருனோவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Wednesday, 07 June 2023 - 12:19

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளரான புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, கடந்த மே 28ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, நடாஷா எதிரிசூரியவின் கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அவருக்கு உதவி குற்றச்சாட்டில் SL-Vlog இன் உரிமையாளர் என கூறப்படும் புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips