மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இன்று மாலை (07) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த மகிழூந்து ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மகிழூந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் முன் பகுதிக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories