அஸ்திரேலியா அருகே உள்ள செலமன் தீவுகளில் நேற்று சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வை தொடர்ந்து சிறிய அளவில் ஆழிப்பேரலையும் தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்.
கிரீன்வீச் நேரப்படி 1.12 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இது கடலுக்கடியில் 5.8 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories