அமெரிக்காவில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் சமீப காலமாக இடம் பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெனடிக் மாகாணத்தில், கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானர்.
இந்தநிலையில், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அங்குள்ள மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் முறையில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories