பிரேரணை ஆராயப்படுகிறது.

Friday, 08 March 2013 - 15:57

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.

ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணை நேற்று இலங்கையிடம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த பிரேரணை ஆராயப்படுகிறது.
இதன் பின்னர் இந்த பிரேரணை குறித்த இலங்கையின் நிலைப்பாடு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபைக்கு தங்கள் செய்திகளை அறிவிப்பதற்கு, பொதுமக்கள், வடக்கில் இருந்து கொழும்புக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கயி நாடுகளின் நிவ்யோர்க் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்கீ இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு வரவிருந்த சுமார் 700 பேர்வரையில், அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது தொடர்பில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், பொது மக்கள் தங்களிடம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்க தகவல் இருப்பதாக கருதினால், அதற்கு மாற்று வழிகள் இருப்பதாக தெரிவித்தார்.
கொழும்பிற்கு வந்தோ, அல்லது ஐக்கிய நாடுகளின் தூதுவர்களிடம் ஊடாக மாத்திரமே இந்த தகவலை வழங்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் பேச்சாளரது இந்த கருத்தின் மூலம், வவுனியாவில் பொது மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டமையை ஐக்கிய நாடுகள் பொருட்படுத்தவில்லை என்பது புலனாவதாக, இன்னர் சிட்டி பிரஷ் சுட்டிக்காட்டியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips