அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை, இலங்கைக்கு வழங்குவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்தள்ளது.
அவுஸ்திரேலியாவின் சட்ட ஆராய்வாளர் எமிலி ஹவீஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான தகவல்களை வழங்கலாம், எவற்றை வழங்க கூடாது என்பது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் கடுமையான வரையறைகளை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் அகதிகள் குறித்த தகவல்களும் உள்ளடங்கும்.
இவ்வாறான தகவல்கள் வழங்கப்படும் பட்சத்தில், இலங்கையில் உள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு சிக்கல் ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
Follow US
Most Viewed Stories