ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம், சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள மனித உரிமைகள் பேரவை தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்த வருடத்தை போன்றே, இந்த வருடமும் இலங்கை விடயத்தில் மனித உரிமைகள் பேரவை தோற்றுவிட்டதாக, கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்த, மனித உரிமைகள் பேரவையுடம் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories