இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களை பாதுகாக்க முடியாத இந்தியாவும், திராவிட முன்னேற்றக் கழகமும், தற்போது ஏன் கூச்சல் இடுகிறது என்று இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
அதன் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் நடத்திய தாக்குதல்களில் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதன் போது இந்தியாவும், திராவிட முன்னேற்றக் கழகமும் அமைதியாக இருந்தன.
அவர்கள் நினைத்திருந்தால், யுத்தத்தை தடுத்து நிறுத்தி, தமிழ் மக்களை அழிவில் இருந்து பாதுகாத்திருக்கலாம்.
எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது.
இராணுவத்தினர் அமைதியாகிவிட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவும், திராவிட முன்னேற்றக்கழகமும் கூச்சலிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories