போலி நுழைவு அனுமதியுடன் மோல்டா செல்ல முனைந்த மூன்று ஈரானியர்கள் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறை அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து லண்டன் வழியான மோல்டா செல்ல முனைந்ததாக அதிhகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US






Most Viewed Stories