கொழும்பு, புறக்கோட்டை மெலிபன் சந்தியில் அமைந்திருந்த ஆறு மாடிக் கட்டிடமொன்றின் முதல் இரு மாடிகளும் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் மாடிக்கட்டிடமே உடைந்துள்ளதாகவும், கீழ் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாடிகள் உடைந்து விழும் போது நிலத்தோடிருந்த கீழ் பகுதியுள்ள மாபிள்கள் உடைந்துள்ளன.
இருந்தபோதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியமையால் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த கட்டிடத்திற்கு அருகில், பிறிதொரு கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவருவதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories