உலக கெசீனோ மன்னன் என வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கரும் இலங்கையினுள் தமது வர்த்தகத்தை ஆரம்பிக்க அனுமதிப் பத்திரம் ஒன்றை பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கெசினோ சூதாட்ட நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் காலத்தில் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அவ்வாறான தருணத்தில் ஹர்ஷ டி சில்வா தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
Follow US
Most Viewed Stories