தர முயர்த்தப்படுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இன்று அதிகாலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையினை அரச தாதியர் சங்க தலைவர் சமன் ரத்னப்ரிய விடுத்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஒத்துழைப் வழங்கப்பட மாட்டாது என அனைத்து இலங்கை தாதியர் சங்க தலைவர் எஸ் பீ தலைவர் மெதிவத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தாதியர் சேவையில் நிலவும் குறைப்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான சகல தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories