த.தே.கூ வெற்றால் அது அரசாங்கத்தின் தவறே - ஜே வி பி

Wednesday, 21 August 2013 - 8:43

%E0%AE%A4.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AF%82+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87+-+%E0%AE%9C%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF+

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் வெற்றிப்பெற்றால் அது அரசாங்கத்தின் தவறே ஆகும் என ஜே வி பி தெரிவித்துள்ளது.
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜே வி பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு மக்கள் துன்பப்பட்டவர்கள், 30 வருடங்களாக அவர்கள் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்தார்கள், யுத்தம் நிறைவடைந்த மிகுதி 4 வருடங்களை அரசாங்கம் வீணடித்து விட்டது.
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்க்கவில்லை. இவ்வாறு அவர்களில் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்திருக்குமானால், வடக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றிப்பெற முடியாது.

[MP3]t65492_1[/MP3]

எவ்வாறாயினும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் போது, தேர்தலை இலக்காக கொண்டு முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டளஸ் அழகபெறும இவ்வாறு குறிப்பிட்டார்.
மாற்றம் ஏற்படுத்த சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதன்போது பலர் எம்மை குறைகூறலாம். என்றாலும் மக்களின் நலன் கருதியே நாங்கள் தீர்மானங்களை மேற்கொள்கின்றோம். மாகாண சபை தேர்தல்களின் வெற்றி பெறுவது அல்ல அரசாங்கத்தின் இலக்கு எதிர்காலம் குறித்தே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்கிறது.

[MP3]t65492_2[/MP3]



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips