போலியான 151 ஆயிரம் ரூபா நோட்டுக்களுடன், தொலை காட்சி நாடக நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு மஹரகம அஞ்சல் நிலைய வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதான மஹரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும் போது இவரிடம் பெரும் தொகையான பொதிகள் காணப்பட்டதாகவும், அதனை பிரித்து சோதனை செய்த போதே அந்த போலி நோட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தனக்கு வேரொருவரிடம் இருந்து இந்த நோட்டுக்கள் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories