மந்தகதி பேருந்துகள்

Wednesday, 21 August 2013 - 18:35

%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

மிக மந்த கதியில் செல்கின்ற பயணிகள் பேருந்துகளை அடையாளம் காணும் பொருட்டு, சீ.சீ.டீ.வி. கெமராக்களை பொறுத்த தென்மாகாண சபை தீர்மானித்துள்ளது.

தென்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து சபையின் பணிப்பாளர் ராஜ்மார இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பேருந்துகள் குறித்து பொது மக்களின் முறைபாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்ததீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக, தென்மாகாணத்தின் ஹம்பாந்தொட்டை, மாத்தரை மற்றும் காலி மாவட்களில் தெரிவு செய்யப்பட்ட பாதைகளில் இவ்வாறான கமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

பின்னர் கட்டம் கட்டமாக அவற்றை வலைப்பின்னலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips