எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்; சிங் பங்குகொள்ளக் கூடாது என்று தமிழக கட்சிகள் கோரிவரும் நிலையில், இந்தியா இது குறித்து இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவிpல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கைஙயில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, பொதுநலவாய மாநாட்டை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக மற்றும் பாண்டிச் சேரி முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இன்றைய ராஜ்ய சபாவில் கேள்விநேரத்தின் போது பிரிதொரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், 13 வது அரசியல் திருத்தம் உரிய முறையில் மேற்கொள்ளப் படவேண்டும் என்பே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டு;ள்ளார்.
Follow US
Most Viewed Stories