தியதலாவை – எல்லேகம பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று தியதலாவை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் மற்றும் பிரதேச வாசிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்குள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை, அவர்கள் ஹப்புத்தளை பிரதேச சபை செயலாளரிடம் கையளித்தனர்.
Follow US
Most Viewed Stories