தேர்தல் சட்டங்களை மீறி வடமேல் மாகாணத்தில் சமுர்தி பயனாளிகளுக்கு சந்திப்புகளை நடத்துவது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்ற விடுக்கப்பட்டுள்ளதாக, சமூர்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக அதன் செயலாளர் சாமர மத்தும கலுகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தேசத்தின் மகுடம் சம்பந்தமாகவே இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதாக, சமுர்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பந்துல திலக சிறி எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இது சம்பந்தமாக எந்தவித ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories