சிரியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இரசாயன ஆயுதங்களை களைவதில் சிக்கல்கள் ஏற்;பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளி;ன் ஆயுத களைவாளர்கள் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் ஏற்கனவே சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தநிலையில் போராளிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் இரசாயண ஆயுதங்கள் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது.
நாளுக்கு நாள் சிரியாவின் பிரதேசங்கள் அரசாங்க துருப்பினர் மற்றும் போராளிகளின் கட்டுப்பாடுகளுக்கு மாறிவருகின்றன
இதன் காரணமாக போராளிகளின் பிரதேசங்களில் இரசாயன ஆயுத களைவு தொடர்பில் ஒத்துழையாமை பிரச்சினை ஏற்பட்டுள்ளது
இதேவேளை சிரியாவில், இரசாயன ஆயுத உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் 20 தொழிற்சாலைகளில் 5 தொழிற்சாலைகள் ஐக்கிய நாடுகளின் நிபுணர்களால் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன
Follow US
Most Viewed Stories