பிலிப்பீன்சில் பாரிய புவியதிர்வு

Tuesday, 15 October 2013 - 19:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81



மத்திய பிலிப்பீன்ஸில் இடம்பெற்ற 7.2 ரிச்டர் அளவிலான புவியதிர்வு காரணமாக சுமார் 85 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, பொஹோல் தீவில் சென்டி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கட்டிட இடிபாடுகளில் பலஉயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இதுதவிர, தேசிய விடுமுறை தினமான இன்று பிலிப்பீன்சின் சில கட்டிடங்கள் மற்றும் வரலாற்று தலங்களும் புவியதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

பொஹொல் பிராந்தியத்தில் மாத்திரம் 69 பேர் உயிரிழந்தமையை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது பாரிய  பிராந்தியமான சிபு மாகாணத்தில் மேலும் 15 பேர் பலியாகினர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips