இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக விருந்தகங்களின் உரிமையாளர்களின் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் முதல் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாடு வழமைக்கு திரும்புகின்ற போதிலும் விருந்தகங்களில் உள்ளுர் சுற்றுலா பயணிகளின் வருகையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விருந்தகங்கள் சார் சேவையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.