நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டுள்ளார்.
இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் தூக்குக் கயிறு இறுகியதால் மூச்சு திணறி சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணத்தின் பின்னணியில் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 08 பேர் தொடர்புப்பட்டிருப்பதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்ட 08 பேரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் சுமார் 07 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக படவாய்ப்புக்க் கிடைக்காமல் போளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சுஷாந்த் சிங் ராஜ்புத் உளரீதியாக பாதிக்கப்பட்டமையே அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதீர் குமார் ஓஜா இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளமை இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டுள்ளார்.
இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் தூக்குக் கயிறு இறுகியதால் மூச்சு திணறி சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணத்தின் பின்னணியில் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 08 பேர் தொடர்புப்பட்டிருப்பதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்ட 08 பேரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் சுமார் 07 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக படவாய்ப்புக்க் கிடைக்காமல் போளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சுஷாந்த் சிங் ராஜ்புத் உளரீதியாக பாதிக்கப்பட்டமையே அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதீர் குமார் ஓஜா இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளமை இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.