சூரரைப்போற்று திரைப்படத்துக்கு பின்னர் பல நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகிவருகின்றன.
கடந்தவாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் முதல்பார்வை (ப்ரஸ்ட் லுக்) வெளியானது.
இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 40ஆவது படமான 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் தலைப்பு அறிவிப்புடன், முதல்பார்வை நேற்று வெளியானது.
இந்நிலையில், இன்று அவரின் பிறந்தநாளில் அவரது 39 ஆவது பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‛ஜெய்பீம்' என பெயரிடடுள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
முதல் பார்வை போஸ்டரில் சூர்யா சட்டத்தரணி வேடத்தில் உள்ளார்.
ஒன்றன் பின் ஒன்றாக வெளியான சூர்யா படங்களின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்தவாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் முதல்பார்வை (ப்ரஸ்ட் லுக்) வெளியானது.
இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 40ஆவது படமான 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் தலைப்பு அறிவிப்புடன், முதல்பார்வை நேற்று வெளியானது.
இந்நிலையில், இன்று அவரின் பிறந்தநாளில் அவரது 39 ஆவது பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‛ஜெய்பீம்' என பெயரிடடுள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
முதல் பார்வை போஸ்டரில் சூர்யா சட்டத்தரணி வேடத்தில் உள்ளார்.
ஒன்றன் பின் ஒன்றாக வெளியான சூர்யா படங்களின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.