தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருகின்றது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான ‘பிக்பொஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் ஆகியோர் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் பிக்பொஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வௌியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் விளம்பர பணிகளுக்காக ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக்பொஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பொஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருகின்றது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான ‘பிக்பொஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் ஆகியோர் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் பிக்பொஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வௌியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் விளம்பர பணிகளுக்காக ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக்பொஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பொஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.