சிறையிலிருக்கும் மகனுக்கு பணம் அனுப்பிய ஷாருக் கான்

Monday, 18 October 2021 - 18:33

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு அவரது தந்தையான பொலிவூட் நடிகர் ஷாருக் கான் காசுக் கட்டளை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 3 ஆம் திகதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆர்யன் கானுக்கு பிணை வழங்குவதற்கு மும்பை நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

தற்போது அவர் தரப்பில் போதைப்பொருள் தடுப்பு சட்ட விசேட நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவரது தாய் வீட்டிலிருந்து உணவு சமைத்து கொண்டு சென்றார். எனினும் சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்க மறுத்தனர்.

இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள உணவகத்தில் செலவு செய்வதற்காக ஷாருக் கான் தனது மகனுக்கு 4,500 ரூபாவை காசுக் கட்டளை ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், சிறையில் இருக்கும் தனது மகனுடன் ஷாருக் கான் தொலைக்காணொளி வழியாக உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.







Exclusive Clips