சர்ச்சைக்குரிய காணொளி பதிவால் கைதான பிக்பொஸ் பிரபலம்!

Tuesday, 19 October 2021 - 15:19

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%21
பொலிவூட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி.

இவர், இந்தி பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்து, இவர் வெளியிட்ட காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.

இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுத்ரி மீது காவல்துறையிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா காவல்துறையினர் நேற்று (18) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதை அடுத்து பிணை கோரி அவர், அரியானா நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா பிணையில் விடுவிக்கப்பட்டார்.







Exclusive Clips