மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன்’ திரைப்படத்தை இயக்குகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர்.
வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் முதல்பார்வை பரவலாக அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தோம். பாடல் பதிவின் போது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன்’ திரைப்படத்தை இயக்குகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர்.
வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் முதல்பார்வை பரவலாக அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தோம். பாடல் பதிவின் போது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.