கிரிக்கட் விளையாட்டில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறையை தூண்டும் வகையிலான விடயங்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவையினால் தீர்வொன்று பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் சில காலம் கிரிக்கட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கிறிஸ் கெய்லே முதலாவதாக கருத்து வெளியிட்டதாகவும் டெரன் சமி தெரிவித்தார்.