Top Story
நாட்டில் நிலவும் டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு, பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் விசேட நுளம்பு ஒழிப்பு மற்றும் பாடசாலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்கள் முறையான தரத்திலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விபரங்களுக்கு
General12 July 2026
டெங்கு அச்சம்: மாணவர்களுக்கு விசேட அனுமதி
Live Football Scores
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பியவர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

General 13 July 2026
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பியவர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் எச்.ஐ.வி அபாயம்: சுகாதார அமைச்சு தகவல்

General 13 July 2026
இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் எச்.ஐ.வி அபாயம்: சுகாதார அமைச்சு தகவல்

லோர்ட்ஸில் வரலாற்று வெற்றி - இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்!

General 13 July 2026
லோர்ட்ஸில் வரலாற்று வெற்றி - இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி : வீட்டு வாடகை உதவித்தொகை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

General 13 July 2026
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி : வீட்டு வாடகை உதவித்தொகை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!

General 13 July 2026
உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!

பரீட்சை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் – தேடுதல் தீவிரம்

General 13 July 2026
பரீட்சை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் – தேடுதல் தீவிரம்
International News

பரிஸ் அருகே பாரிய காட்டுத்தீ – 800 ஹெக்டேயர் வனம் எரிந்து நாசம்

International 13 July 2026
பரிஸ் அருகே பாரிய காட்டுத்தீ – 800 ஹெக்டேயர் வனம் எரிந்து நாசம்

தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

International 13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்

International 13 July 2026
ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்

ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா .

International 12 July 2026
ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா .

ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

International 12 July 2026
ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

கால்பந்து வீரரை போல ஒத்த தோற்றத்தையுடைய ரஷ்ய மொடல்

International 12 July 2026
கால்பந்து வீரரை போல ஒத்த தோற்றத்தையுடைய ரஷ்ய மொடல்

அவுஸ்திரேலியக் கடற்கரையில் மர்ம உலோகங்கள்: விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

International 12 July 2026
அவுஸ்திரேலியக் கடற்கரையில் மர்ம உலோகங்கள்: விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

International 12 July 2026
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில்  சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

International 12 July 2026
 ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஜோர்டானின் பிரின்ஸ் ஹசன் தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ வசதிகள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்!

International 12 July 2026
ஜோர்டானின் பிரின்ஸ் ஹசன் தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ வசதிகள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்!

கனடாவின் டொரண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி - ஐவர் காயம்!

International 12 July 2026
கனடாவின் டொரண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி - ஐவர் காயம்!

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான் : அமெரிக்காவுடன் போர் பதற்றம் தீவிரம்!

International 12 July 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான் : அமெரிக்காவுடன் போர் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடிப் பதிலடித் தாக்குதல் : இந்த வாரத்தில் மூன்றாவது முறை!

International 12 July 2026
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடிப் பதிலடித் தாக்குதல் : இந்த வாரத்தில் மூன்றாவது முறை!

தென்னிந்திய பிரபல பாடகி எஸ் ஜானகி காலமானார்.

International 11 July 2026
தென்னிந்திய பிரபல பாடகி எஸ் ஜானகி காலமானார்.

கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!

International 11 July 2026
கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!
More News
General13 July 2026

அரசாங்கத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்- ம் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும்

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்கே ஆட்சியை ஒப்படைத்துள்ளதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அவர்களின் உண்மை நிலை முழுமையாக வெளிப்படும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது இந்த அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்காகவே ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு கொடுக்கப்பட்டது என்றால், இல்லாவிட்டால் கடந்த 76 ஆண்டுகால சாபம் என்று கூறுவதைப் போல, இன்னும் ஒரு 76 ஆண்டுகளுக்கு இதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'எங்களிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால் நாங்கள் இதைவிட மிகச் சிறப்பாகச் செய்திருப்போம்' என்று அவர்கள் தொடர்ந்து கதை பேசிக்கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தின் மீதமுள்ள மூன்று ஆண்டுகள் போகும்போது, அவர்கள் சோதிக்கப்பட்ட விதம் மக்களுக்கு நன்றாகவே புரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
 அரசாங்கத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்- ம் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும்
General13 July 2026

இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்

அனுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவைப் பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார். 1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டு தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில், அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது பின்னால் 12 பிள்ளைகளையும், 325 பேரப்பிள்ளைகள் வரையிலான மிகப்பெரிய குடும்ப வம்சாவளியையும் கொண்டுள்ளார்.

விபரங்களுக்கு
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
General13 July 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து வருவதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.இந்தச் செய்திகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் பொதுமக்களை மோசடிக்கு உள்ளாக்க முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.இது தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுக்கவில்லை என்றும், இந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட அல்லது வங்கித் தரவுகளை வழங்க வேண்டாம் என்றும், இத்தகைய மோசடிச் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
General13 July 2026

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாத வீடமைப்புத் திட்டங்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது.கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் சூரியன் செய்திப் பிரிவுக்கு குறிப்பிட்டார்.எனினும், குறித்த வீடுகளில், அநேகமானவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே, கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்து, பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குறித்த வீடுகளின் உரிமையாளர்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் வீடமைப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.அதற்கமைய, ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாயிரம் வீடுகளில், மூவாயிரம் வீடுகளுக்கான நிர்மாணப்பணிகளை, அடுத்த வருடத்தின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 13 ஆயிரம் குடும்பங்களுக்கான வீட்டுத் தேவை உள்ளதாக ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வீட்டுத் தேவைக்கான உண்மையான இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளை மாவட்ட செயலாளர்களிடம் கோரியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.மாவட்ட செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அமைய, வீடமைப்புத் திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் சூரியன் செய்திப் பிரிவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

விபரங்களுக்கு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாத வீடமைப்புத் திட்டங்கள் குறித்து புதிய கணக்கெடுப்பு!
General13 July 2026

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்

கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்ட செய்தியில், ஷேக் ஹமாத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவமும், கட்டார் நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, அரச குடும்பத்தினர் மற்றும் கட்டார் மக்களுக்கு தனது இதயபூர்வமான இரங்கலை ஜனாதிபதி தெரிவித்துக்கொண்டார்.

விபரங்களுக்கு
கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவு: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்
International News

பரிஸ் அருகே பாரிய காட்டுத்தீ – 800 ஹெக்டேயர் வனம் எரிந்து நாசம்

International 13 July 2026
பரிஸ் அருகே பாரிய காட்டுத்தீ – 800 ஹெக்டேயர் வனம் எரிந்து நாசம்

தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

International 13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!

ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்

International 13 July 2026
ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்

ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா .

International 12 July 2026
ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா .

ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

International 12 July 2026
ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்

கால்பந்து வீரரை போல ஒத்த தோற்றத்தையுடைய ரஷ்ய மொடல்

International 12 July 2026
கால்பந்து வீரரை போல ஒத்த தோற்றத்தையுடைய ரஷ்ய மொடல்

அவுஸ்திரேலியக் கடற்கரையில் மர்ம உலோகங்கள்: விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

International 12 July 2026
அவுஸ்திரேலியக் கடற்கரையில் மர்ம உலோகங்கள்: விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

International 12 July 2026
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில்  சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

International 12 July 2026
 ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஜோர்டானின் பிரின்ஸ் ஹசன் தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ வசதிகள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்!

International 12 July 2026
ஜோர்டானின் பிரின்ஸ் ஹசன் தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ வசதிகள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்!

கனடாவின் டொரண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி - ஐவர் காயம்!

International 12 July 2026
கனடாவின் டொரண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி - ஐவர் காயம்!

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான் : அமெரிக்காவுடன் போர் பதற்றம் தீவிரம்!

International 12 July 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான் : அமெரிக்காவுடன் போர் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடிப் பதிலடித் தாக்குதல் : இந்த வாரத்தில் மூன்றாவது முறை!

International 12 July 2026
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடிப் பதிலடித் தாக்குதல் : இந்த வாரத்தில் மூன்றாவது முறை!

தென்னிந்திய பிரபல பாடகி எஸ் ஜானகி காலமானார்.

International 11 July 2026
தென்னிந்திய பிரபல பாடகி எஸ் ஜானகி காலமானார்.

கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!

International 11 July 2026
கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!
Sports Stories
Explore More
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் வீரரருமான ராகுல் டிராவிட், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), மெக்கல்லமுக்கு அடுத்தபடியாகப் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் ராகுல் டிராவிட்டின் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயிற்சியாளர் போட்டியில் ஆண்டி பிளவர், ரிச்சர்ட் டாசன், குமார் சங்ககாரா, ஆண்ட்ரூ பிளின்டாப் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏஷஸ்‌ கிண்ணத் தொடரைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரைவில் பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
18 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி : சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் ஸ்டீபன் பிளெமிங்!

18 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி : சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் ஸ்டீபன் பிளெமிங்!

ஐபிஎல் (IPL) வரலாற்றின் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டணிகளில் ஒன்றாக திகழ்ந்த சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியினரும், அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும், பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் 18 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டு வீரராக சென்னை அணியுடன் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று அணியை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார். அவரது வழிகாட்டுதலில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கிண்ணங்களை வென்று சாதனை படைத்தது. பிளெமிங்கின் பிரிவு குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் நீடித்த கூட்டணிகளில் ஒன்றை நாம் பகிர்ந்து கொண்டோம். நீங்கள் உருவாக்கிய பாரம்பரியம் எங்களுக்கு என்றும் உத்வேகமாக இருக்கும். அணிக்காக ஆற்றிய அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் மறக்க முடியாத பங்களிப்புக்கு மனமார்ந்த நன்றியும் மரியாதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்டீபன் பிளெமிங்கின் விலகல், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்!

விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்!

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மீண்டும் செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.லண்டனில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சின்னர் 6-7 (7-9), 7-6 (7-2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார். இதன் மூலம், விம்பிள்டனில் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட சின்னர், தனது ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.ஸ்வெரேவ் தனது முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சின்னரின் துல்லியமான சர்வீஸ் மற்றும் தற்காப்பு ஆட்டத்துக்கு முன்னால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம், ஓபன் எரா வரலாற்றில் விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்த 10ஆவது வீரர் என்ற பெருமையை ஜன்னிக் சின்னர் பெற்றுள்ளார்.

விபரங்களுக்கு
இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஹெதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஹெதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஹெதர் நைட், லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2010-ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்படி ஹெதர் நைட் இதுவரையில் இங்கிலாந்து அணிக்காக 320 போட்டிகளில் விளையாடியுள்ளார்.இவர் 2016 முதல் 2025 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்திய நிலையில், 2017ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தது அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக முக்கியமான தருணமாகும்.சர்வதேச அரங்கில் 7,988 ஓட்டங்களையும் ஆறு சதங்களையும் குவித்துள்ள ஹெதர் நைட், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.இந்தநிலையில் "16 ஆண்டு காலப் பயணம் முடிவுக்கு வருவது வருத்தமாக இருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் எனது ஓய்வை அறிவிப்பது சரியாகத் தோன்றுகிறது," என ஹெதர் நைட் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இவரது மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணிகள் என்றும் போற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
இங்கிலாந்துடனான பந்தயம் : நிபந்தனையை நிறைவேற்றிய நோர்வேஜியன் வானூர்தி நிறுவனம்!

இங்கிலாந்துடனான பந்தயம் : நிபந்தனையை நிறைவேற்றிய நோர்வேஜியன் வானூர்தி நிறுவனம்!

2026 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸுடன் செய்திருந்த பந்தய வாக்குறுதியை நோர்வேஜியன் வானூர்தி நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, @FlyNorwegian தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கின் சுயவிவர (Profile) சின்னத்தை பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தின் இலட்சினையாக மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கை, கடந்த சில நாட்களாக இணையவாசிகளையும், உலக வானூர்தி போக்குவரத்துத் துறையையும் ஈர்த்திருந்த இரு நிறுவனங்களுக்கிடையிலான நட்புறவான சமூக ஊடக உரையாடலுக்கு இனிமையான நிறைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (12.07.2026) வெளியிடப்பட்ட நோர்வேஜியன் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு, அதன் பின்தொடர்பவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. சில நாட்களுக்கு முன்பு தாங்களே முன்வைத்திருந்த பந்தய நிபந்தனைக்கு இணங்க, @FlyNorwegian கணக்கின் சுயவிவரப் படம் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தின் இலட்சினையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
டி20 தொடரை 4-0 என வென்றது இங்கிலாந்து! இந்தியாவுக்கு ஏமாற்றம்

டி20 தொடரை 4-0 என வென்றது இங்கிலாந்து! இந்தியாவுக்கு ஏமாற்றம்

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் 131 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 95 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தநிலையில் 258 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் 56 ஓட்டங்களையும், திலக் வர்மா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் சேம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 4-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி

ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இறுதிப் போட்டி, இன்று (11) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில், இரு அணிகளும் சமபலத்துடன் களமிறங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழையினால் கைவியடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தநிலையில் ஐந்தாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. அதிலும் துடுப்பாட்ட வரிசையிலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இங்கிலாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்குப் பலத்த சவாலை அளித்து வருகிறது. எனினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

விபரங்களுக்கு
தொடர் தோல்வியின் எதிரொலி - இந்திய அணியை மறுசீரமைக்கும் பிசிசிஐ

தொடர் தோல்வியின் எதிரொலி - இந்திய அணியை மறுசீரமைக்கும் பிசிசிஐ

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, அணியில் முறையான மாற்றங்களை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணி, சமீபகாலமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துடனான டி20 தொடர்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.இந்தத் தோல்விகள் அணி நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ கருதுகிறது.உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பரிசோதனை முயற்சிகளில் பிசிசிஐ ஈடுபட்டது. ஆனால், இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்திலும் தொடர்களைத் தவறவிட்டுள்ளது. இந்த சரிவைச் சரிசெய்ய பிசிசிஐ தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.2028ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரையும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளையும் கருத்தில் கொண்டு, வீரர்களின் தேர்வு மற்றும் கள வியூகங்களை மறுபரிசீலனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆரம்பமாகவுள்ள டி20 தொடருக்கு முன்னதாக, இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!

திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!

மதுரையின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபகாலமாக மண்டபத்தின் மையக் கோபுரத்தின் மேல்பகுதியில் சில கற்கள் உடைந்து விழும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொல்லியல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், கோபுரத்தை பாதுகாப்பாகவும், அதன் வரலாற்றுச் சிறப்பை பாதிக்காமலும் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரலாற்றுக் குறிப்புகளின்படி, திருமலை நாயக்கர் அரண்மனையை அமைப்பதற்குத் தேவையான மணல் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. இதனால் உருவான பள்ளத்தை சீரமைக்கும் நோக்கில், கி.பி. 1645-ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் அந்த இடத்தை சதுர வடிவிலான தெப்பக்குளமாக மாற்றியதுடன், அதன் மையத்தில் அழகிய நீராழி மண்டபத்தையும் அமைத்தார். இன்று வரை அந்த மண்டபம் மதுரையின் பாரம்பரியக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. சுமார் 304.8 மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட இந்தத் தெப்பக்குளம், நான்கு புறங்களிலும் சுமார் 15 அடி உயரமுள்ள கல் சுவரால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் 12 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு தெப்பக்குளத்தின் மையத்தில் தோட்டத்துடன் கூடிய நீராழி மண்டபமும், அதனுள் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவின்போது இந்த மண்டபம் பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்கிறது.

விபரங்களுக்கு
தெலுங்கு சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?

தெலுங்கு சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?

தென்னிந்திய மற்றும் பொலிவுட் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை ஜான்வி கபூர், தனது அடுத்தகட்ட திரைப்பயணம் குறித்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த 'பெத்தி' படத்திற்குப் பிறகு, அவர் தெலுங்கு அல்லது பொலிவுட் திரையுலகில் பெரிய அளவிலான புதிய படங்களில் இதுவரை ஒப்பந்தமாகவில்லை.'பெத்தி' திரைப்படம் தன்னை அகில இந்திய அளவில் ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தும் என்று ஜான்வி மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தப்படம் வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்றாலும், ஜான்வியின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளானது. படத்தின் மீதான ஏமாற்றத்தினால், வெளியீட்டிற்குப் பின் அந்தப் படத்தை அவர் விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.இதன் விளைவாக, இனிவரும் காலங்களில் தெலுங்கு படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜான்வி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் அமையாத பட்சத்தில், அவர் தெலுங்கு படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொள்ளக்கூடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை அல்லு அர்ஜுனின் அடுத்த படமான 'ராக்கா'வில் ஜான்வி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், தயாரிப்பு நிறுவனம் அல்லது நடிகை தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.தெலுங்கு படங்களை தாண்டி, பொலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில் தனது இடத்தைத் தக்கவைக்க ஜான்வி போராடி வருகிறார். ரன்வீர் சிங் போன்ற பொலிவுட் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பதற்காக அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபரங்களுக்கு
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா

இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா

சமூக வலைதளங்களில் தனது மகள்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பதிவிடும் நபர்களுக்கு, நடிகை குஷ்பு சுந்தர் தனது எக்ஸ் தளத்தின் வாயிலாகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.தனது குடும்பப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள குஷ்பு, குறைவான விளம்பரத்திற்காகபிரபலங்களின் குடும்பத்தினரை, குறிப்பாகப் பெண்களைக் குறிவைக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு இது எச்சரிக்கை. நானும் சுந்தர் சி-யும் எங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும் சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம். நான் அமைதியாக இருப்பதைக் கண்டு, உங்களின் மனநிலையை நான் ஏற்றுக்கொண்டதாகக் கருத வேண்டாம். தன் குட்டிகளைப் பாதுகாக்கும் காயம்பட்ட புலி நான்; இனி பொறுத்துக்கொள்ள முடியாது, என்று பதிவிட்டுள்ளார்.குஷ்புவின் இந்தப் பதிவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல. நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பெண்ணின் மகள்களைக் கேலி செய்வது அப்பட்டமான கோழைத்தனம் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி. நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு ஆதரவாக நிற்கிறேன், என ராதிகா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு குஷ்பு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.குஷ்புவின் இளைய மகள் ஆனந்திதா சுந்தர், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், சிறுவயது முதலே உடல் தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தான் சந்திக்கும் இணையதளத் துன்புறுத்தல்கள் குறித்து மனம் திறந்திருந்தார். இது சமூகத்தில் நிலவும் அறியாமையின் வெளிப்பாடு என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

விபரங்களுக்கு
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது கணவர் சோஹைல் கட்டாரியாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வரும் நடிகை ஹன்சிகா, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.இந்த நிலையில், தாம் தொடர்பில் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள் தொடர்பாக ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவாக பிரபலங்கள் என்றாலே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பிரபலங்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது, அவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் உணர வேண்டும்," என்று தெரிவித்தார்.

விபரங்களுக்கு
நடிகர் ஆர்யா மீது வழக்கு - இதுவா காரணம்?

நடிகர் ஆர்யா மீது வழக்கு - இதுவா காரணம்?

நடிகர் ஆர்யா மற்றும் 'அனந்தன் காடு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் மற்றும் நடிகர் ஆர்யாவின் உதவியாளர் மீது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.'அனந்தன் காடு' திரைப்பட படப்பிடிப்பிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கேமரா மற்றும் லைட்டிங் உபகரணங்களுக்கான கட்டணத்தில், 2.12 கோடி ரூபாயில் 1.80 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாக உபகரணங்களை வழங்கிய நிறுவனம் புகார் அளித்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே நிலுவைத் தொகையை செலுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தும், பணம் வழங்கப்படாததாலும், பணத்தை கேட்டபோது மிரட்டல் விடுத்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்நாட்டு காவல்துறை இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
அமீர்கானின் திருமண மோதிரத்தில் ஒளிந்திருக்கும் பிரமாண்டம் - ஆச்சரியத்தில் திரையுலகம்!

அமீர்கானின் திருமண மோதிரத்தில் ஒளிந்திருக்கும் பிரமாண்டம் - ஆச்சரியத்தில் திரையுலகம்!

பொலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகர் அமீர்கான், கௌரி ஸ்ப்ராட் என்பவரைத் தனது மூன்றாவது வாழ்க்கைத் துணையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் எளிமையாக நடந்தாலும், மணப்பெண் கௌரிக்கு அமீர்கான் அணிவித்த திருமண மோதிரம் தற்போது பொலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகவும், ஆச்சரியமாகவும் மாறியுள்ளது. அதன்படி இந்த மோதிரத்தின் மையப்பகுதியில் மிகவும் அரிதான "கேபோசோன்" ரக ரூபி கல் பதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அந்த ரூபி கல்லைச் சுற்றி 40 இயற்கையான வைரங்கள் பதிக்கப்பட்டு மோதிரம் மெருகேற்றப்பட்டுள்ளது.இந்த மோதிரத்தை வடிவமைக்க மட்டும் சுமார் 256 மணிநேர கடின உழைப்பு தேவைப்பட்டுள்ளது.இதேவேளை சுமார் 136 திறமையான கலைஞர்களின் கூட்டு முயற்சியால் இந்த மோதிரம் செதுக்கப்பட்டுள்ளது.திருமணம் எளிமையாக நடைபெற்ற போதிலும், மோதிரத்தின் இத்தகைய பிரம்மாண்டமான வடிவமைப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விபரங்களுக்கு
வசூல் மழையில் சமந்தாவின் “மா இண்டி பங்காரம்” திரைப்படம் - வசூல் எவ்வளவு தெரியுமா ?

வசூல் மழையில் சமந்தாவின் “மா இண்டி பங்காரம்” திரைப்படம் - வசூல் எவ்வளவு தெரியுமா ?

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இந்தப்படம் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்‌ஷன் கதையாக உருவாகியிருந்தது. சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த நிலையில், இந்தப் படம் 100 கோடியை வசூலித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் வசூல் குறித்த தகவலைச் சமந்தாவின் கணவர் அவரிடம் பகிர்ந்துகொண்ட தருணத்தின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
பாகுபலி பிரபாஸின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் : மனைவியுடன் செட்டில் ஆக ரூ.300 கோடியில் பிரம்மாண்ட வீடு!

பாகுபலி பிரபாஸின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் : மனைவியுடன் செட்டில் ஆக ரூ.300 கோடியில் பிரம்மாண்ட வீடு!

'பாகுபலி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, "பான் இந்தியா" நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் பிரபாஸ் தற்போது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில், 'பவுசி', 'ஸ்பிரிட்', 'கல்கி-2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. 46 வயதான பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவரது திருமணம் குறித்து மீண்டும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறலாம் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஐதராபாத்தில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.300 கோடி செலவில் பிரபாஸ் கட்டி வரும் புதிய பிரம்மாண்ட வீடு, அவரது வருங்கால மனைவிக்காகவே கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரபாஸ் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////