General12 July 2016

வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

வடக்கு மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் இன்று முற்பகல் வட மாகாண சபைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அது , வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இலுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதி கோரிய இந்தியாவின் கோரிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாகும்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் , வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அநேகமான மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய மீனவர்கள் இந்நாட்டு கடல் எல்லைக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வட - கிழக்கு கடற்றொழில் கூட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்டன் ஜேசுதாசன் இதன் போது  தெரிவித்துள்ளார்
Related recommendation
Hiru TV News | Programmes