General08 October 2019

சற்று முன் கொழும்பில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நேற்றிரவு 7.50 அளவில் இனந்தெரியாத ஒருவரால்; மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சருகமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் 24 வயதான ஜம்பட்டா வீதி 131ம் தோட்டத்தை சேர்ந்தவர் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அவை பாதாள உலகக்குழுவினருடன் தொடர்பு கொண்டவை என்று விசாரணைகளில் தெரியவந்திருந்தன.

இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Recomands
Hiru TV News | Programmes