International17 May 2013

உலக தொலைத்தொடர்பு தினம்

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் உள்ளங்கையில் அடங்கிவிட்டது.

இணையம், மற்றும் புதிய தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக, மே மாதம் 17ஆம் திகதி உலக தொலைத்தொடர்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 
1969ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. 

அதை நினைவுப்படுத்தும் விதமாக இன்றிலிருந்து இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

உலகில் 1937ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முதல் “மின்னியல் டெலிகிராப்” முதல் தற்போதுள்ள புதிய தொழில்நுட்பங்கள் வரை, தொலைத்தொடர்பு துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன.

இணையம், கையடக்க தொலைபேசி, தொலை காட்சி பெட்டி போன்வை தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன. 

இதன் வளர்ச்சியால், உலகின் எல்லைகள் சுருங்கி விட்டன. 

எனினும், தொழில்நுட்பங்களின் பயன்பாடு, கிராமப்புற பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes