General17 May 2013

விமல் வீரவன்சவிற்கு எதிராக உணவு தவிர்ப்பு

தேர்தல் சட்டங்களை மீறியதாக சட்டத்தின் முன் நிரூபணமான ஒரேயொரு அமைச்சரவை அமைச்சர் விமல் வீரவன்சவே என, கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடுவெல மாநகர சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

விமல் வீரவன்ச தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என மனித உரிமை ஆணைக்குழு கூட ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு கடுவெல மாநகர சபை தேர்தலில், அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் தேர்தல் சட்டங்களை மீறியதாக கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்.

கையேடு விநியோகித்தல் மற்றும் பேரணி; நடத்தப்பட்டமை ஆகிய தொடர்பான முறைப்பாடுகளே செய்யப்பட்டிருந்தன.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய தேர்தல் சட்டகளை மீறியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் அதில் கலந்து கொண்டிருந்ததாகவும் விசாரண அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதற்கு அமைய குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே ஏற்புடைய தீர்மான் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாம் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடுவெல சுற்று வட்டத்தில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes