ஜப்பானில் உள்ள பனிச்சறுக்கிடம் ஒன்றில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 7 மாணவர்கள் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக ஜப்பான் க்யோடா செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்குண்ட மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பணிச்சரிவினால் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிச்சரிவு ஏற்பட்டபோது, பனிச்சறுக்கிடத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் 70 பேர்வரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow US
Most Viewed Stories