உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பரகத் வீதியிலுள்ள வீடொன்றில் மதியம் உணவருந்தியவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுள் குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், காத்தான்குடி காவல்துறையினரும் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Follow US
Most Viewed Stories