Live Football Scores
International News

விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

International 08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

International 08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!

International 08 July 2026
விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!

ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்

International 08 July 2026
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

International 08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

International 08 July 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!

International 08 July 2026
அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!

முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

International 08 July 2026
முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது

International 08 July 2026
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது

கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

International 08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்

International 07 July 2026
மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்

சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!

International 07 July 2026
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!

'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!

International 07 July 2026
'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!

உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!

International 07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!

விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!

International 07 July 2026
விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!
More News
General08 July 2026

ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் : விசாரணைகள் நிறைவு - சிஐடி நீதிமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட இலண்டன் பயணத்தின் போது, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு, இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான கோப்புகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பயணச் செலவில் பாதியளவு போக்குவரத்துக்கு செலவிடப்பட்டதாகவும், போக்குவரத்து வசதியை பிரித்தானிய அரசாங்கமே மேற்கொண்டதாகவும் தெரிவித்து, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீது, அரச நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை மற்றும் 1.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தியமை தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் : விசாரணைகள் நிறைவு - சிஐடி நீதிமன்றத்தில் அறிவிப்பு
General08 July 2026

ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், தெஹ்ரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், அவர்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது "நேர விரயம்" என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
General08 July 2026

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஜனாதிபதி ஒதுக்கல் நிதியைப் பயன்படுத்தி இரண்டு பதவிகளுக்கான வேதனத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் மற்றும் , புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (08) நிராகரித்தார். இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், அரச நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை, இரண்டு வேலைகளுக்கு வேதனம் பெற்றுள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசேட செயற்திட்ட நிறுவனத்தின் ஊடாக 22 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இவ்வாறு முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.குறித்த விசேட செயற்திட்ட நிறுவனத்தில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் 135க்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பணிப்பாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.சந்தேகநபர் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த நிதியைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், முன்வைக்கப்பட்ட அனைத்துக் காரணங்களையும் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால் பிணை மனுவை நிராகரித்து, சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

விபரங்களுக்கு
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
General08 July 2026

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (08) நிறைவடைகின்றது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என இரு தரப்பினரும் தமக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
General08 July 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட இலண்டன் பயணத்தின் செலவுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்
International News

விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

International 08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!

ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

International 08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!

International 08 July 2026
விண்வெளியில் மின்னிய அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் - நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் காட்சி!

ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்

International 08 July 2026
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

International 08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

International 08 July 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!

International 08 July 2026
அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!

முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

International 08 July 2026
முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!

சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது

International 08 July 2026
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது

கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

International 08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!

மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்

International 07 July 2026
மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்

சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!

International 07 July 2026
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!

'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!

International 07 July 2026
'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!

உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!

International 07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!

விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!

International 07 July 2026
விண்வெளிக்குச் செல்லும் தங்கம், வைரம் : வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகும் "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" நிறுவனம்!
Sports Stories
Explore More
கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு தகுதி

கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு தகுதி

கால்பந்து செம்பியன்சிப் 2026 இன்றைய போட்டியில் காலிறுதிக்கு முந்திய சுற்றில், தண்ட உதை முறையில் கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை. இந்த நிலையில், ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க தண்ட உதை முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் துல்லியமாக செயல்பட்ட சுவிட்சர்லாந்து அணி, தண்ட உதை முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடையை இ சர்வதேச ஒலிம்பிக் குழு தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாகஇ ரஷ்யா மீண்டும் ஒலிம்பிக் அரங்கில் இணைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக கருதப்படுகிறது. 2022 பெப்ரவரியில் ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து யுக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளான லுஹான்ஸ்க்இ டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியாவில் பிராந்திய ஒலிம்பிக் மன்றங்களை அங்கீகரித்ததற்காக ஒக்டோபர் 2023-ல் ரஷ்ய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாகக் குழு அந்தத் தடையை நீக்கியுள்ளது. இதன் மூலம் லொஸ் ஏஞ்சல்ஸ் 28 ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் உட்பட பல சர்வதேசப் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. எனினும்இ விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா தனது கொடியையும் வண்ணங்களையும் காட்சிப்படுத்தலாமா அல்லது அதன் தேசிய கீதத்தை இசைக்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

விபரங்களுக்கு
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!

கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!

கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 3000 ஆவது கோல் இன்று பெறப்பட்டுள்ளது.ஆர்ஜன்டீனா அணி எகிப்திய அணிக்கு எதிராக பெற்ற மூன்றாவது கோலே இந்த சரித்திரக் கோலாக மாறியது.இதன்படிஇ ஃபெர்னாண்டஸ் தலையால் முட்டி பெற்ற கோல், கால்பந்தாட்ட செம்பியன்சிப் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3,000வது கோலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதுஅதேநேரம் ஆட்டத்தில் 72 வது நிமிடங்கள் வரை எந்த கோலையும் பெறாத ஆர்ஜன்டீனா அணி ஆட்டம் நிறைவு பெற 11 நிமிடங்கள் இருந்தபோதும்இ மேலதிக நேரத்திலும் பெற்ற மூன்று கோல்கள் அந்த அணியின் வரலாற்றில் முக்கிய கோல்களாக அமைந்திருந்தன.கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் அர்ஜென்டீனா அணி 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் ஆர்ஜன்டீனாவின் சிறப்பாட்டக்காரர் மெஸ்ஸி இன்றைய வெற்றியின் பின்னர் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டு வெற்றியை கொண்டாடினார்.அத்துடன் இன்றைய போட்டியில் ஒரு கோலை பெற்ற நிலையில், இந்தத் தொடரில் எட்டு கோல்களுடன் தங்கப் பாதணி விருதிற்கான போட்டியில் மீண்டும் மெஸ்ஸி முன்னிலை பெறுகிறார்.அத்துடன் கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் இதுவரை 21 கோல்களை பெற்று தொடர்ந்தும் மெஸ்ஸி முன்னிலைப் பெற்றுள்ளார்.அவருக்கு அடுத்ததாக பிரான்ஸ் அணியின் கெலியன் எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.போர்த்துக்கலின் ரொனால்டோ 15 கோல்களை பெற்றுள்ளார். அதேநேரம் இங்கிலாந்தின் ஹரி கேன் கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 14 கோல்களை பெற்றுள்ளார்.

விபரங்களுக்கு
சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா

சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா

கால்பந்து செம்பியன்சிப்பில் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, ஒரு பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஆட்டத்தின் இறுதியில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இதன் மூலம்இ இன்று எகிப்த்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார். ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டிய ஃப்ரீ கிக் மூலம் அர்ஜென்டினாவுக்காக முதல் கோலை பெற்றார். நான்கு நிமிடங்கள் கழித்து, லியோனல் மெஸ்ஸி பெனால்டி பகுதிக்குள் இருந்து கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இதனையடுத்து, கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார். முன்னதாகஇ 15வது நிமிடத்தில், யாசர் இப்ராஹிம், தலையால் முட்டி எகிப்துக்கு முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து முஸ்தபா சிகோ எகிப்தின் இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஆர்ஜன்டீனா அணி, காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அல்லது கொலம்பியாவை எதிர்த்தாடவுள்ளது

விபரங்களுக்கு
ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் மரணம்!

ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் மரணம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான், 'அப்லாஸ்டிக் அனீமியா'என்ற அரிய வகை இரத்த சோகை நோய்க்கான சிகிச்சையில் இருந்த நிலையில் தனது 38 ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த அரிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் இந்தியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷாபூர் சத்ரான், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடித்தளத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவர் ஷாபூர் சத்ரான் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் பங்களிப்பைப் பாராட்டியுள்ளது.மேலும், அவரது பங்களிப்புகளும் சாதனைகளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்றும், தேசிய அணிக்காக அவர் ஆற்றிய பணிகள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது என்றும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அஃப்கானிஸ்தான் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷாபூர் சத்ரான், 44 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளையும், 36 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவர் தனது கடைசி சர்வதேச போட்டியில் 2019 ஆம் ஆண்டு விளையாடினார். மைதானத்தில் அவரது சிறப்பான ஆட்டங்களுக்கு அப்பால், விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பின் மூலம் ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்ததாக கிரிக்கெட் சபை புகழாரம் சூட்டியுள்ளது.

விபரங்களுக்கு
எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!

எல்லீஸ் பெர்ரியின் வரலாற்றுச் சாதனை : அதிக ICC கிண்ணங்களை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை!

எல்லீஸ் பெர்ரி (Ellyse Perry) சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவிலான ஐசிசி (ICC) கிண்ணங்களை வென்ற ஒரே கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவர், அவுஸ்திரேலிய அணிக்காக 2010, 2012, 2014, 2018, 2020, 2023 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் 7 மகளிர் T20 உலகக் கிண்ணங்களையும், 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 2 மகளிர் ஒருநாள் (ODI) உலகக் கிண்ணங்களையும் வென்றுள்ளார். இதன்மூலம், மொத்தம் 9 ஐசிசி உலகக் கிண்ணங்களைக் கைப்பற்றி, சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி கிண்ணங்களை வென்ற வீராங்கனை என்ற அரிய சாதனையை எல்லீஸ் பெர்ரி தன்வசப்படுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
ஸிம்பாப்வே தொடருக்கான இந்திய 20 க்கு 20 அணி அறிவிப்பு : சஞ்சு சம்சனுக்கு இடமில்லை!

ஸிம்பாப்வே தொடருக்கான இந்திய 20 க்கு 20 அணி அறிவிப்பு : சஞ்சு சம்சனுக்கு இடமில்லை!

2026, ஜூலை மாத இறுதியில் ஸிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15 பேர் கொண்ட குழாமில் இருந்து சஞ்சு சம்சன் நீக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முதன்மை இந்திய அணியில் சஞ்சு சம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த ஸிம்பாப்வே தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா? அல்லது அணியிலிருந்து நீக்கப்பட்டாரா? என்பது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபை தெளிவான விளக்கம் எதையும் அளிக்கவில்லை எனினும், அவர் அணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவருக்கு ஓய்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்று தேர்வு சபை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. நெருக்கடியான கால அட்டவணை காரணமாக சஞ்சு சம்சனுடன் சேர்த்து அக்சர் படேல், வோஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த பெப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்த 20 க்கு 20 உலகக் கிண்ணத் 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருது வென்ற சம்சன், அதன் பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இதுவே அவருக்கு ஸிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்படாமைக்கான காரணம் என்றும் கிரிக்கட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ஸிம்பாப்வே சுற்றுலாவுக்காக தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் 20 க்கு 20 அணியிலிருந்து சஞ்சு சம்சன் உட்பட 7 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வோஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இந்த ஸிம்பாப்வே தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. பதிலாக, ரிங்கு சிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் மீண்டும் இந்திய 20 க்கு 20 அணிக்குத் திரும்பியுள்ளனர். பிரப்சிம்ரன் சிங், வேகப்பந்து வீச்சாளர்கள் யாஷ் தாக்கூர், அசோக் சர்மா மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச 20 க்கு 20 அழைப்பைப் பெற்றுள்ளனர். அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஹர்ஷ் துபே, தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 என மூன்று வடிவ இந்திய அணிகளிலும் இடம்பிடித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்

அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்

கால்பந்து தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இணை நடாத்துனரான அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெல்ஜியம் அணிக்கு சார்லஸ் டி கெட்டேலேரே (Charles De Ketelaere) 9 ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) அபாரமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். எனினும், அடுத்த 116 விநாடிகளுக்குள் சார்லஸ் டி கெட்டேலேரே மீண்டும் ஒரு ஹெடர் கோல் அடித்து பெல்ஜியத்தின் முன்னிலையை 2-1 என உறுதி செய்தார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் பெல்ஜியத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. 57 ஆவது நிமிடத்தில் அமெரிக்க இலக்குக் காப்பாளரின் தவறான நகர்வை சாதகமாக்கிக் கொண்ட ஹான்ஸ் வனகென் (Hans Vanaken) பெல்ஜியம் அணியின் மூன்றாவது கோலை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு (Romelu Lukaku) ஒரு அபாரமான கோலை அடித்து பெல்ஜியத்தின் வெற்றியை 4-1 என உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பெல்ஜியம் அணி காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
'கருப்பு' வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் வேதனம் ரூ.100 கோடியா?

'கருப்பு' வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் வேதனம் ரூ.100 கோடியா?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது வேதனத்தை உயர்த்தியுள்ளதாகவும், அவரது அடுத்த திரைப்படத்திற்காக ரூ.100 கோடி வேதனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொலிவூட் தரப்புக்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், சூர்யாவின் வேதன உயர்வு தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விபரங்களுக்கு
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

இயற்கையைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நதியைத் திருமணம் செய்துகொண்டு, அதன் உரிமைகளுக்காகப் போராடி வரும் வினோதச் சம்பவம் உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பொறுத்தது என்றாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயதான மெக் (Meg) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒரு காரணத்திற்காகத்  திருமண வாழ்வில் நுழைந்துள்ளார். இங்கிலாந்தின் ஏவன் (Avon) நதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டு கவலையடைந்த அவர், அந்த நதியின் அவல நிலையை உலகிற்கு உணர்த்த முடிவு செய்தார். இதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஏவன் நதியை அவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அன்று முதல், தனது பெயரை ‘மெக் ஏவன்’ (Meg Avon) என மாற்றிக்கொண்ட அவர், தன்னை அந்த நதியின் மனைவியாகவே முன்னிறுத்தி வருகிறார். தற்போது ஏவன் நதிக்குச் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு புதுமையான இயக்கத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இதற்காக மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக (University of the West of England) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்

யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்

வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொண்டுள்ள நடிகர் மோகன்லால், தன்னிடம் மேலும் ஆறு யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தச் சிலைகள் இருப்பதாகக் கேரள வனத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில், தனிநபர்கள் தங்கள் வசம் உள்ள வனவிலங்கு பொருட்களின் விவரங்களை முன்வந்து அறிவிப்பதற்காகக் கேரள வனத்துறை சார்பில் பொதுமன்னிப்புத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டது.முன்னதாக தன்னிடம் 4 யானைத் தந்தங்கள் இருப்பதாக மோகன்லால் அறிவித்திருந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது மேலும் பல பொருட்கள் தன்னிடம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகளிடம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.வனத்துறை அதிகாரிகளின் தகவல்படி, நடிகர் மோகன்லால் புதிதாக அறிவித்துள்ள பொருட்களின் 6 யானைத் தந்தங்கள், 13தந்தச் சிலைகள், கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுளர்களின் உருவச்சிலைகள் என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் மற்றும் தந்தத்திலான சிலைகள் மீட்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, முறையான அனுமதியின்றி இரண்டு ஜோடி (நான்கு) யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!

71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!

உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் திரைப்பட நட்சத்திரமான 71 வயதுடைய ஜாக்கி ஜான் , தனது இறுதிச் சடங்கில் ஒலிக்க வேண்டிய இரகசியப் பாடல் ஒன்றைப் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் மறைந்த பிறகே இந்த பாடல் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். தனது வாழ்க்கைப் பயணத்தையும், உலகிற்கு அவர் கூற நினைக்கும் இறுதிச் செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தனது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இந்தப் பாடல் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அவர் விரும்பியதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!

'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!

பொலிவுட் நடிகர் ஷாருக்கான், மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "என் கணவரைவிட உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறேன்" என்று கூறிய பெண் ரசிகைக்கு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. அதற்குப் பதிலளித்த ஷாருக்கான், "நான் உங்கள் வாழ்க்கையில் எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் உங்கள் கணவர்தான் உங்களுடன் எல்லா தருணங்களிலும் இருப்பார். எனவே, என்னை ரசிப்பது போதும், உங்கள் கணவரையே அதிகமாக நேசியுங்கள்" என்று அறிவுரை வழங்கினார். அத்துடன், அந்தப் பெண்ணை அவரது கணவரிடம் அனைவரின் முன்னிலையிலும் "ஐ லவ் யூ" என்று சொல்லவும் ஷாருக்கான் ஊக்குவித்தார். ஷாருக்கானின் இந்த முதிர்ச்சியான பதில் மற்றும் குடும்ப உறவை மதிக்கும் வகையிலான அறிவுரை, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!

பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!

மறைந்த திரைப்படக் கலைஞர் பாக்யராஜின் இறுதி ஆசையை, கவிஞர் வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதுமாறு, மறைவுக்கு முன்னதாகவே பாக்யராஜ் வைரமுத்துவிடம் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கிணங்க, அந்த நூலுக்கான முன்னுரையை எழுதிய வைரமுத்து, பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவை நேரில் சந்தித்து அதனை வழங்கியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட வைரமுத்து, "இது உயிர்த்துடிப்புள்ள புத்தகம்... யார் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள்." என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னுரை வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பாக்யராஜின் குடும்பத்தினரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்யராஜின் இறுதி ஆசையை மதித்து வைரமுத்து மேற்கொண்ட இந்தச் செயல், திரைப்பட மற்றும் கலை உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விபரங்களுக்கு
3ஆவது முறையாகத் திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகர் அமீர் கான்

3ஆவது முறையாகத் திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகர் அமீர் கான்

பொலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் (61), தனது நீண்டகால காதலியான தொழில்முனைவோர் கௌரி ஸ்ப்ராட்டை இன்று (05) மும்பையில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.மும்பை, பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள அமீர் கானின் இல்லத்தில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணப் பதிவு இன்று முறைப்படி நடைபெற்றது. ஜூலை 5ஆம் திகதி இரு குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்களின் பங்கேற்புடன் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவுள்ளதாக முன்னதாக அமீர் கான் தெரிவித்திருந்தார்.பெங்களூரைச் சேர்ந்த கௌரி ஸ்ப்ராட், வடிவமைப்பு மற்றும் அழகுக்கலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக இருந்த இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 60ஆவது பிறந்தநாளின் போது அமீர் கான், கௌரியை ஊடகங்களுக்குத் தனது துணையாக அறிமுகப்படுத்தியிருந்தார்.பொலிவுட்டின் வழக்கமான ஆடம்பரத் திருமணங்களைப் போலன்றி, முற்றிலும் தனிப்பட்ட முறையில் இந்த திருமண நிகழ்வு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பொலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்கள் சிலரே கலந்துகொண்டனர்.

விபரங்களுக்கு
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் சேவை குறித்து தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 40 வயதைக் கடந்த பின்னரும் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வரும் த்ரிஷா, அண்மைக் காலமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார். மேலும், அவரது புதிய திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆடை நிறுவனமான Zara-வை குறியிட்டு (Tag) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் பொதியிடுவதற்கு (Pack) முன் ஆடைகளைச் சரிபார்த்து அனுப்புங்கள்." என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆடை நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு குறித்து பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை, இந்த விவகாரம் தொடர்பாக Zara நிறுவனம் எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////