Video of the Day
Latest TV News Bulletin
International News

லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!

International 05 September 2026
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!

விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

International 05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு

International 05 September 2026
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு

அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை

International 05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை

நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

International 05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்

International 05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்

டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை

International 05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை

காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா

International 05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த  அமெரிக்கா

சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.

International 05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.

9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!

International 04 September 2026
9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!

பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்

International 04 September 2026
பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்

அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு

International 04 September 2026
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு

காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!

International 04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!

அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

International 04 September 2026
அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

International 04 September 2026
பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
More News
General04 September 2026

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கொன்றுடன் தொடர்புடைய இந்த உத்தரவின் பிரகாரம், குறித்த பிரதிவாதிகள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபரங்களுக்கு
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
General04 September 2026

பொரலஸ்கமுவவில் உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

பொரலஸ்கமுவ - மாலினி புலத்சிங்ஹள மாவத்தையில் உந்துருளியில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த மேலதிக விசாரணைகளையும், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

விபரங்களுக்கு
பொரலஸ்கமுவவில் உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
General04 September 2026

நாளை முதல் அமுலுக்கு வரும் உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள்

நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகவும், அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகவும், 425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகவும் உள்ளது. சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
நாளை முதல் அமுலுக்கு வரும் உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள்
General04 September 2026

பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு: வரலாற்றுச் சின்னம் வெளிப்பாடு!

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு மன்னரால் உஷ்ண காலத்தில் வசிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த பகுதி, ஆண்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக சீதா மாளிகையின் பகுதிகள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. எனினும், அந்த பகுதி முழுமையாக நீரிலிருந்து வெளிப்படுத்தப்படாததால், அங்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்த பின்னரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தலத்தைப் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு: வரலாற்றுச் சின்னம் வெளிப்பாடு!
General04 September 2026

தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!

ஹட்டன் - பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 56 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் தெரேசியா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதே தோட்டத்தைச் சேர்ந்த வேலு புஷ்பராணி என்ற 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியே சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது. பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்தநிலையில், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண், சக தொழிலாளர்களின் உதவியுடன் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!
International News

லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!

International 05 September 2026
லண்டனில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு : நடுங்கியது தமிழக அரசு!

விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

International 05 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு

International 05 September 2026
கல்லூரி மாணவர் சேர்க்கையில் சாதி, மத விபரங்கள் கட்டாயமில்லை – தமிழக அரசு

அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை

International 05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை

நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

International 05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்

International 05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்

டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை

International 05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை

காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா

International 05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த  அமெரிக்கா

சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.

International 05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.

9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!

International 04 September 2026
9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!

பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்

International 04 September 2026
பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்

அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு

International 04 September 2026
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு

காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!

International 04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!

அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

International 04 September 2026
அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி

பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

International 04 September 2026
பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
Sports Stories
Explore More
பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!

பும்ராவுக்காக தேடப்படும் பதில் வீரர்: பிசிசிஐ-யின் உடற்தகுதி சோதனையும் சர்ச்சைகளும்!

உபாதை காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக லக்னோ அணியின் பிரின்ஸ் யாதவை பிசிசிஐ தேர்வுக்குழு அடையாளம் கண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவர் இன்னும் தனது உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. பும்ராவுடன் சேர்த்து சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உபாதைக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தொடரில் இடம்பெற்றுள்ள காயமடைந்த வீரர்கள் டெல்லியில் ஒரு வாரம் நடைபெறும் தீவிர உடற்தகுதி சோதனையிலும் மாதிரி டி20 போட்டிகளிலும் விளையாடி முழு உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே செப்டம்பர் 10 ஆம் திகதி அணியுடன் இணைய முடியும். இந்திய வீரர்கள் தொடர்ந்து உபாதைக்குள்ளாவது பிசிசிஐ-க்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பும்ராவின் கையாளுமை மற்றும் பணிச்சுமை மேலாண்மை குறித்து முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கவலை தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு: பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்!

இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு: பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக சிரேஷ்ட வீரர்களான மொஹமட் ரிஸ்வான் (Mohammed Rizwan) மற்றும் இமாம் உல் ஹக் (Imam-Ul-Haq) ஆகியோர் தொடரின் பாதியிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணங்களின் போது பாகிஸ்தான் அணியின் வீரர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கக்கேடான நடத்தை மற்றும் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொஹமட் ரிஸ்வான் போதிய ஒட்டங்கள் எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், இமாம் உல் ஹக் காயம் காரணமாக என்ற பெயரில் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியைத் தவிர்த்ததும் அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீக்கப்பட்ட வீரர்கள் விசாரணைக் குழுவில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளைத் தொடர்ந்து பயிற்சிவிப்பாளர் சர்பராஸ் கான் (Sarfaraz Khan) நீக்கப்பட்டு, மைக் ஹெசன் (Mike Hesson) இடைக்கால பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழு உறுப்பினர் மிஸ்பா உல் ஹக் (Misbah-ul-Haq) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேர்வுக் குழு தலைவர் ஆகிப் ஜாவேத்தின் (Aqib Javed) பதவியைப் பறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
மகளிர் ஆசிய கிண்ணம் 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றுமொரு சாதாரண ஆட்டமே : ஆயிஷா ஜாபர் கருத்து!

மகளிர் ஆசிய கிண்ணம் 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றுமொரு சாதாரண ஆட்டமே : ஆயிஷா ஜாபர் கருத்து!

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து தமது நிலைப்பாட்டை பாகிஸ்தான் அணியின் வீராங்கனை வெளிப்படுத்தியுள்ளார். மகளிர் ஆசிய கிண்ணம் 2026 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டி, வழக்கமான மற்றுமொரு ஆட்டமே என்று பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஆயிஷா ஜாபர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் என்றாலே அதிக எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் இருக்கும் என்றாலும், தங்களை பொறுத்தவரை இது மற்றுமொரு சாதாரண ஆட்டமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் , பாகிஸ்தான் அணி ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்தி வருவதாகவும், தாய்லாந்துக்கு எதிரான வெற்றிகரமான ஆட்டத்தை தொடர்ந்து இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த அணி என்ற நிலையில் உள்ளது. இந்திய அணியின் வீராங்கனை தீப்தி சர்மா செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில், சமீபகால மோதல்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அணி எப்போதும் ஒரு படி மேலே இருந்து வருவதாகவும், அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைக்க முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ணப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் GOAT விராட் கோலி : கிளென் மெக்ஸ்வெல் புகழாரம்!

ஒருநாள் (ODI) கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் சிறந்த வீரர் (GOAT) யார் என்ற விவாதத்திற்கு அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலியே ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்று அவர் குறிப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரர்களான பிராட் ஹாடின் (Brad Haddin) மற்றும் அலிசா ஹீலி (Alyssa Healy) தொகுத்து வழங்கும் 'கீப்பிங் இட் கிரிக்கெட்' (Keeping it Cricket) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது மெக்ஸ்வெல் இதனைக் குறிப்பிட்டார். விராட் கோலி குறித்துப் பேசிய மேக்ஸ்வெல், "ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே அவர்தான் சிறந்தவர். அவர் ஆடும் சில இன்னிங்ஸ்கள் நம்ப முடியாதவை. அவர் களத்தில் துடுப்பெடுத்தாடும் போது அதிக நேரம் மைதானத்தில் இருப்பது போலத் தோன்றும். பந்துகளை மைதானத்தில் தான் விரும்பும் இடத்திற்கு எளிதாகத் தட்டிவிடக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. " என்று குறிப்பிட்டுள்ளார். இருபதுக்கு 20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஆண்ட்ரே ரஸலை (Andre Russell) அவர் சிறந்தவராகத் தேர்ந்தெடுத்தார். ஆண்ட்ரே ரஸலின் அபாரமான சக்திவாய்ந்த துடுப்பாட்டம், நேர்த்தியான களத்தடுப்பு மற்றும் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் ஆகியவற்றுடன் அவர் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் எனவும் மெக்ஸ்வெல் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சக வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை (Steve Smith) அவர் உலகின் தலைசிறந்த வீரராகக் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித் வேறு ஒரு கிரகத்தில் துடுப்பாட்டம் செய்வது போல் விளையாடியதை அருகில் இருந்து பார்த்தது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றார்.

விபரங்களுக்கு
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி

இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி

இலங்கைக்கு எதிரான சொந்த நாட்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு போட்டி வடிவங்களிலும் ஹாரி ப்ரூக் அணிக்குத் தலைமை தாங்க உள்ளார். இந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) , ஜோஸ் பட்லர் (Jos Buttler), பென் டக்கெட் (Ben Duckett)இ அடில் ரஷித் யுAdil Rashid மற்றும் வில் ஜொஸ்ரீக்ஸ் ஆகியோர் ஒருநாள் மற்றும் T20ஐ அணிகள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜோ ரூட்இ 20க்கு20 தொடரில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்தத் தொடரில் தலா மூன்று 20க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

விபரங்களுக்கு
சிஎஸ்கே அணியின் பயிற்றுவிப்பாளராக சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய அறிவிப்பு

சிஎஸ்கே அணியின் பயிற்றுவிப்பாளராக சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய அறிவிப்பு

சென்னை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி தொடர்பாக அந்த அணியின் நிர்வாகத்துடன் பேசியுள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, சென்னை அணியில் தனக்கு பயிற்றுவிப்பாளர் அல்லது வழிநடத்துநர் (Mentor) பதவி வழங்கப்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.சென்னை அணி தனக்கு மிகவும் நெருக்கமானது எனக் குறிப்பிட்ட அவர், அந்த அணியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.எனினும், இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க வேண்டியது சென்னை அணி நிர்வாகமே என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
சிபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்த தசுன் ஷானக!

சிபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்த தசுன் ஷானக!

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷானக படைத்துள்ளார். St Kitts and Nevis Patriots அணிக்காக விளையாடும் தசுன் ஷானக, நேற்று நடைபெற்ற St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்களைப் பெற்றார்.இந்தப் போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த தசுன் ஷானக, 2018ஆம் ஆண்டு 40 பந்துகளில் சதமடித்த ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்துள்ளார்.அவரது அதிரடி இன்னிங்ஸில் 12 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்களும் அடங்ககும் தசுன் ஷானகவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் St Kitts and Nevis Patriots அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது.

விபரங்களுக்கு
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ விலகல்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது தொடரில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, T20 அணியில் இரண்டு மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மேற்கொண்டுள்ளது.குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும், பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.மேலும், குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் சரித் அசலங்க இலங்கை அணியின் தலைவராக செயல்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
கைவசம் 10 வாய்ப்புகள் அடுத்தடுத்து கலக்கத் தயாராகும் அனுபமா பரமேஸ்வரன்!

கைவசம் 10 வாய்ப்புகள் அடுத்தடுத்து கலக்கத் தயாராகும் அனுபமா பரமேஸ்வரன்!

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாடிய பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ரசிகர் ஒருவர் "உங்களின் அடுத்த திரைப்படம் என்ன?" என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய படங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அனைத்துப் படங்கள் பற்றிய முழுமையான தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தான் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தெலுங்கில் 'கிரேசி கல்யாணம்', 'போகி' உள்ளிட்ட 3 படங்களிலும், தமிழில் 3 படங்களிலும், மலையாளத்தில் 3 படங்களிலும் மற்றும் இந்தியில் 1 படத்திலும் என மொத்தமாக 10 திரைப்படங்களில் தான் புதியதாக ஒப்பந்தமாகியுள்ளதாக அனுபமா பரமேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

விபரங்களுக்கு
திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்ட வரும் அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லர்!

திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்ட வரும் அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லர்!

இயக்குனர் A.L விஜய் இயக்கத்தில், ஷாலினி அஜித்குமாரின் தயாரிப்பு நிறுவனமான கோல்டன் ட்ரொபி பிலிம் ப்ரொடக்ஷன்ஸ் (Golden Trophy Film Production) தயாரிப்பில், மற்றும் G.V பிரகாஷ் குமார் இசையில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள 'கிளாடியேட்டர்ஸ் - பர்சூட் ஆஃப் சேலஞ்ச்' (Gladiators - Pursuit of Challenge) ஆவணப் படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி, இந்த ஆவணப்படத்தின் சிறப்பு ட்ரெய்லர் வரும் செப்டம்பர் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சிறப்பு ட்ரெய்லரை ரசிகர்கள் திரையரங்குகளில் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திரையரங்கப் பட்டியலைப் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
கைதி 2' வாய்ப்பு கிடைத்தால் ஆயிரம் வீத உழைப்பைப் போடுவேன்

கைதி 2' வாய்ப்பு கிடைத்தால் ஆயிரம் வீத உழைப்பைப் போடுவேன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'கைதி 2' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது. இந்தநிலையில், குறித்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் தனது முழுமையான உழைப்பைக் கொடுப்பேன் என இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பல வருடங்களுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ், 'கைதி 2' படத்திற்கு நீதான் இசையமைப்பாய் எனக் கூறியிருந்தார். அந்த வாய்ப்பு எனக்கு வந்தால் 100 அல்ல, ஆயிரம் வீத உழைப்பைக் கொடுப்பேன். அதேநேரம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்" எனத் தனது யதார்த்தமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். சாம் சி.எஸ். இன் இந்தப் பேச்சு தற்போது திரையுலக வட்டாரத்திலும் அவரது ரசிகர்களிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.

விபரங்களுக்கு
ஹிந்தி சினிமாவுக்கு

ஹிந்தி சினிமாவுக்கு "துரந்தர்" போல தமிழ் சினிமாவுக்கு "அரசன்": சிம்பு நம்பிக்கை

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: "ஹிந்தி சினிமாவுக்கு 'துரந்தர்' எப்படி அமைந்ததோ, அதேபோல் தமிழ் சினிமாவுக்கு 'அரசன்' அமையும். இது சிறிய படம் அல்ல, இந்த படத்திற்காக சிறு வயது முதல் பல்வேறு வயது தோற்றங்களில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் முழுமையை விரும்புபவர் என்பதால் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் இந்த 'அரசன்' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நயன்தாரா – மகிழ்ச்சியில் கண்கலங்கிய ரசிகை

ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நயன்தாரா – மகிழ்ச்சியில் கண்கலங்கிய ரசிகை

நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், அம்ருதா சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கில் ‘ஹாய்’ திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தபோது, நடிகை நயன்தாரா திடீரென அங்கு சென்றுள்ளார்.திரையரங்கில் நயன்தாராவைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். இதன்போது, ரசிகர்களுடன் உரையாடிய நயன்தாரா, கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவரை மேடைக்கு அழைத்துள்ளார்.நயன்தாராவை நேரில் சந்தித்த அந்த ரசிகை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய நிலையில், அவரை நயன்தாரா அன்புடன் அணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

விபரங்களுக்கு
விரைவில் 'மாரி-3' திரைப்படம்? உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

விரைவில் 'மாரி-3' திரைப்படம்? உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'மாரி' மற்றும் 'மாரி-2' படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. குறித்த இரு படங்களிலும் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இந்தநிலையில், குறித்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, 'மாரி-3' படம் உருவாவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இந்த படத்திற்கான ஒரு வரி கதையை நடிகர் தனுஷ் தானாக தயார் செய்துள்ளதாகவும், அதனை இயக்குநர் பாலாஜி மோகனிடம் வழங்கி அதை முழுமையான திரைக்கதையாக மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முந்தைய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகவுள்ள இந்த 'மாரி-3' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
இரட்டைக் குழந்தைகளுக்கு அசத்தலான பெயர்களை சூட்டிய கவின்: வைரலாகும் நிழற்படங்கள்

இரட்டைக் குழந்தைகளுக்கு அசத்தலான பெயர்களை சூட்டிய கவின்: வைரலாகும் நிழற்படங்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் முன்னேறிய கவின், ‘டாடா’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.அண்மையில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்த கவினுக்கு கடந்த மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது தனது குழந்தைகளின் கால்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கவின், தனது மகனுக்கு ‘தியான் லியோ கவின்’ என்றும், மகளுக்கு ‘தியோலினா கவின்’ என்றும் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////