Top Story
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விருந்தக வளாகத்தில் நடைபெற்று வரும் 'Lanka Chairman's Business Excellence Awards 2026' விருது வழங்கல் விழாவில் 'ஹிரு' ஊடக வலையமைப்பு பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

இந்த விழாவில், ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசையாக Hiru TV விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆண்டின் மிகவும் பிரபலமான செய்திச் சேவையாக Hiru News விருதினை வென்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான வானொலிச் சேவையாக Hiru FM தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 'ஹிரு எஃப்.எம்' வானொலியின் "அரா & பெஸ்பரா" நிகழ்ச்சி, ஆண்டின் மிகவும் பிரபலமான வானொலி நிகழ்ச்சியாக விருதை வென்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான விருதை Hiru TVயின் 'Hiru Star' வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடருக்கான விருதை Hiru TVயின் 'Paata Kurullo' வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை, ஹிரு டிவியின் 'பத்தரே விஸ்தரே' வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான செய்தி சமூக ஊடக பக்கத்துக்கான விருதை ஹிரு நியூஸ் ஃபேஸ்புக் பக்கம் வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான செய்தி இணையதளத்திற்கான விருதை Hirunews.lk வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான டிக்டொக் பக்கத்திற்கான விருதை ஹிரு டிவி டிக்டொக், வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை ஹிரு டிவியின் சமுதித்த சமரவிக்ரம, வென்றார்.

ஆண்டின் மிகவும் பிரபலமான தமிழ் வானொலி அலைவரிசைக்கான விருதை சூரியன் எஃப்.எம் வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான ஆங்கில வானொலி அலைவரிசைக்கான விருதை Gold FM வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான இளையோர் வானொலி அலைவரிசைக்கான விருதை Shaa FM வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான வெளிப்புற இசை நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு Mega Blast வென்றது.

ஆண்டின் மிகச் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை ஹிரு டிவியின் “ஹிரு ஸ்டார்” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சாரங்க திசாசேகர வென்றார்.
விபரங்களுக்கு
General06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது: 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பந்தயப் புறாக்கள் மீட்பு!

General 07 September 2026
கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது: 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பந்தயப் புறாக்கள் மீட்பு!

அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்

General 07 September 2026
அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்

குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி

General 07 September 2026
குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி

டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

General 07 September 2026
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

General 07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!

General 06 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
International News

கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி

International 07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி

நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!

International 07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!

ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!

International 07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!

International 07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!

International 07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!

பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!

International 07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!

டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

International 06 September 2026
டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை

International 06 September 2026
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து

International 06 September 2026
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!

International 06 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!

அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

International 06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்

International 06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!

International 06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!

தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!

International 06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!

அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!

International 06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
More News
General06 September 2026

வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்

கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டின் அடிப்படையில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உயர்நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியே இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவர் மரணிக்க வழிவகுத்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எனினும், மேல் நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் மூவரையும் நிரபராதிகளாக அறிவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்தநிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.அத்துடன், இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், வழக்கு தொடர்பான அறிவித்தலை பிரதிவாதிகளுக்கு அனுப்பி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த முற்பட்ட போதே, பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியே வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
General06 September 2026

மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நாட்களில் நாட்டின் தினசரி மின்சாரத்துக்கான தேவை குறைந்த போதிலும், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவோட் ஆகக் காணப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவை, செப்டம்பர் 3 ஆம் திகதியளவில் 2,920 மெகாவோட் வரை படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.எனினும், இந்தக் காலப்பகுதியில் தினசரி மொத்த மின் உற்பத்தி 57 முதல் 58 கிகாவோட் மணிநேரம் (GWh) என்ற அளவில் பேணப்பட்டுள்ளது.இதில் கடந்த செப்டம்பர் முதலாம் திகதி அதிகபட்ச தினசரி உற்பத்தியாக 58.37 கிகாவோட் மணிநேரம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
General06 September 2026

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடனேயே முழு நாட்டுக்கும் அமைதியைக் கொண்டு வந்து சேர்த்ததாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் புலத்சிங்கள பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் பேரணியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.திசைகாட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முதலில் நாட்டுக்கு அன்பையும் அமைதியையும் கொண்டு வந்து சேர்த்ததாகவும், அதைப் பார்த்த உலக நாடுகள் வியப்படைந்ததாகவும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

விபரங்களுக்கு
 தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்
General06 September 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை அவர் வழிநடத்தவுள்ளார். கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த விஜயம் பெரிதும் உதவும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.நீண்டகால நாகரிகத் தொடர்புகள், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளின் அடிப்படையில் இலங்கை உடனான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் 2025 ஆம் ஆண்டு வீசிய டிட்வா சூறாவளியின்போது வழங்கப்பட்ட ஆதரவுகள் ஆகியவை இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கைக்குச் சிறந்த சான்றுகள் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!
General06 September 2026

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள், வெளியேறும் வாயில்களை இணைக்கும் வீதிகளை விரிவாக்க நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.கடந்த 10 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ள அனைத்து பிரதான வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள், வெளியேறும் வாயில்களை இணைக்கும் வீதிகளை விரிவாக்க நடவடிக்கை
International News

கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி

International 07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி

நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!

International 07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!

ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!

International 07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!

International 07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!

International 07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!

பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!

International 07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!

டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

International 06 September 2026
டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை

International 06 September 2026
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து

International 06 September 2026
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!

International 06 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!

அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

International 06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்

International 06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!

International 06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!

தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!

International 06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!

அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!

International 06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Sports Stories
Explore More
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனக்கு எதிரான பலத்த விமர்சனங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கிடையில் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடப் போவதாக உலக கால்பந்தாட்ட சங்கமான பிஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 2027-இல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என இன்ஃபான்டினோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கிண்ண ஆரம்ப விழாவின் போது இது குறித்த கேள்விகளை இன்ஃபான்டினோ தவிர்க்க முற்பட்டபோதிலும் பிஃபா செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, உலகக்கிண்ணப் போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் இவரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு உட்பட பல பிராந்தியக் கூட்டமைப்புகள் மற்றும் தேசிய சங்கங்கள் இவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிஃபாவின் அடுத்த தலைவருக்கான தேர்தல் 2027 மார்ச் 18 அன்று மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெறும். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நவம்பர் 18-க்குள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

விபரங்களுக்கு
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு20 ஆசியக் கிண்ண 2026 தொடரின் 'பி' பிரிவில் நடைபெற்ற தீர்க்கமான போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இந்தத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பங்களாதேஷ் அணி சார்பில் சோபனா மோஸ்தாரி (Sobhana Mostary) 34 ஓட்டங்களையும் திலாரா அக்பர் (Dilara Akter) 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சமூதி பிரபோத 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிலுக்கு 115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது. இலங்கை அணியின் வெற்றிக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரம 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக நிலக்ஷி டி சில்வா 18 ஓட்டங்களையும் இமேஷா துலானி 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மருஃபா அக்பர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விபரங்களுக்கு
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!

புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!

டைமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடர் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உலகின் முன்னணி தடகள வீரர்கள் போட்டியிடும் வேர்ல்ட் அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Ultimate Championship) தடகளப் போட்டித் தொடர் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவும் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார். இதற்கமைய ஈட்டி எறிதல் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரராகக் கருதப்படும் ருமேஷ் தரங்கவுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் டிரினிடாட் அண்ட் டுபாகோவின் கேஷோர்ன் வால்காட் உள்ளிட்ட உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்கள் பலர் களமிறங்கவுள்ளனர். இந்த முறை வேர்ல்ட் அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக உலக தடகளச் சங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கமைய, ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 1,50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கவுள்ளதுடன், இது இலங்கை நாணயமதிப்பில் சுமார் 5 கோடி ரூபாயாகும். எனவே, ருமேஷ் தரங்கவுக்கு உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் போட்டியிட்டு இலங்கைக்காகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதற்கு இது மற்றுமொரு முக்கியமான வாய்ப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!

துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chepauk) தொடங்கி நடைபெற்று வரும் 2026 துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், சவுத் சோன் (South Zone) அணிக்கு எதிராகக் ஈஸ்ட் சோன் (East Zone) அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஈஸ்ட் சோன் அணியின் தலைவர் ஈஷன் கிஷன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஈஸ்ட் சோன் அணி சிறப்பான ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி முதல் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை குவித்தனர். வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 44 ஓட்டங்களையும் , அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 72 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஷிகர் மோகன் 120 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்களும் 03 ஆறு ஓட்டங்களும் அடங்கலாக 85 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஈஷன் கிஷன் 14 நான்கு ஓட்டங்களும் 01 ஆறு ஓட்டமும் அடங்கலாக 111 ஓட்டங்களையும் (2 ஆவது துலீப் கிண்ணச் சதம்) அவருக்கு பக்கபலமாக இணைப்பாட்டத்தில் ஈடுபட்ட குமார் குஷாக்ரா 75 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்களும் 05 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர். சவுத் சோன் அணி சார்பில் சாமா மிலிந்த் 2 விக்கெட்டுக்களையும் திரிபுரனா விஜய் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்களான மொஹமட் சிராஜ், னிதேஷ், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை .

விபரங்களுக்கு
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

சென்னை சேப்பாக்கம் (chepauk) மைதானத்தில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹட் சிராஜின் ஒரே ஓவரில் 14 ஓட்டங்களை விளாசி 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார். சவுத் சோன் (South Zone) அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் முதல் நாளில், ஈஸ்ட் சோன் (East Zone) அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அனுபவம் வாய்ந்த மொஹட் சிராஜின் பந்துவீச்சை அச்சமின்றி எதிர்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் 7 ஆவது ஓவரை வீசிய மொஹட் சிராஜின் பந்துவீச்சில் சூர்யவன்ஷி வரிசையாக 4, 6, 4 என ஒரே ஓவரில் 14 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சிராஜ், தனது முதல் 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 37 பந்துகளில் 5 நான்கு ஓட்டம் மற்றும் 1 ஆறு ஓட்டம் மற்றும் 118.91 துடுப்பாட்ட சராசரியுடன் 44 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவர்களில் 100 ஓட்டங்கள் சேர்த்து ஈஸ்ட் சோன் அணிக்குக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விபரங்களுக்கு
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!

உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!

இந்திய அணியின் 15 வயது இளம் துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷியை முறையாக வழிநடத்தினால், அவர் உலகக் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும், உலகக் கிரிக்கெட்டுக்கே மிகப்பெரிய சொத்தாகவும் உருவெடுப்பார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (Krishnamachari Srikkanth) பாராட்டியுள்ளார். ஐபிஎல், உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.ஸ்ரீகாந்த் தனது யூடியூப் பக்கத்தில் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவரைச் சரியாக வழிநடத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருமையை மீண்டும் மீட்டெடுக்கும் அளவுக்கு அவர் உலகக் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக மாறுவார். சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை பயமின்றி சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார். விரைவில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார். வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே பலரும் துலீப் டிராபி போட்டிகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தனது மனைவியும் இவரது ஆட்டத்திற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார் என்றும் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
சர்வதேச கால்பந்து: கழக போட்டிகளில் 300 கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் புதிய மைல்கல் சாதனை!

சர்வதேச கால்பந்து: கழக போட்டிகளில் 300 கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் புதிய மைல்கல் சாதனை!

மென்செஸ்டர் சிட்டி (Manchester City) அணியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), தனது 26 ஆவது வயதில் கழக கால்பந்து போட்டிகளில் 300 கோல்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக் (Premier League) தொடரில் கோவென்ட்ரி சிட்டி (Coventry City) அணிக்கு எதிரான போட்டியில் மென்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம், கழக கால்பந்து போட்டிகளில் ஹாலண்ட் தனது 300 ஆவது கோலைப் பதிவு செய்தார். ஹாலண்ட் தனது தொழில்முறை கழக வாழ்க்கையில் மொத்தம் 368 போட்டிகளில் விளையாடி இந்த 300 கோல்கள் மைல்கல்லை எட்டியுள்ளார். நவீன கால்பந்து வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட மிகக் குறைந்த போட்டிகளில் (368 போட்டிகள்) ஹாலண்ட் 300 கழக கோல்களை எட்டியுள்ளார். ஹாலண்டின் இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் சிட்டி அணி நடப்பு பிரீமியர் லீக் சீசனில் தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீராங்கனை!

மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீராங்கனை!

மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிவேகமாக 3,000 ஓட்டங்களைக் கடந்த இளம் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய மகளிர் அணியின் வலது கை துடுப்பாட்ட வீராங்கனை ஷபாலி வர்மா (Shafali Verma) படைத்துள்ளார். ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது, இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் தனது 3,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 56 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 57 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 7 ஓட்டங்களை எட்டி துடுப்பெடுத்தாடும் போது, ஷபாலி வர்மா தனது 3,000 சர்வதேச இருபதுக்கு 20 ஓட்டங்களை பதிவு செய்தார். தனது 114 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இந்த இலக்கை எட்டியதன் மூலம், இருபதுக்கு 20 போட்டிகளில் அதிவேகமாக 3,000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 3,000 ஓட்டங்களைக் கடக்கும் 16 ஆவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் 3 ஆவது வீராங்கனையாகவும் ஷபாலி வர்மா இணைந்துள்ளார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More

"குழந்தைகளை நான்தான் வளர்க்கிறேன்... ஆனால் அவர்?" : பதிவின் மூலம் ஆர்த்தி கொடுத்த மறைமுக பதிலடியா? பின்னணியில் உள்ள உண்மை!

நடிகர் ரவி மோகனைப் பிரிந்து வாழ்ந்து வரும் ஆர்த்தியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ரவி மோகனும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கை தொடர்பாக ரவி மோகன் முன்னதாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குடும்பத்திற்காகப் பல விடயங்களைப் பொறுத்துக் கொண்டதாகவும், இனியும் இணைந்து வாழ முடியாது என்பதால் பிரிந்து வந்ததாகவும், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், குழந்தைகளைப் பார்க்க அனுமதிப்பதில்லை என ரவி மோகன் வேதனை தெரிவித்திருந்த நிலையில், தனது மகன்களைப் பார்க்க வேண்டும் என ஆர்த்தி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளை தானே வளர்த்து வரும் நிலையில், ஒருவர் தன்னை ஒரு சிறந்த தந்தையாகப் பெருமைப்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிடும் வகையில் கருத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் சிலர், இது ரவி மோகனை மனதில் வைத்தே பதிவிடப்பட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னரும் ஆர்த்தி வெளியிட்டிருந்த சில மறைமுகமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, “ஹீல்” என்ற வார்த்தையை உள்ளடக்கிய அவரது முன்னைய பதிவு, ரவி மோகனுடன் தொடர்புடையதாக ரசிகர்கள் சிலர் ஊகங்களை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. எனினும், ஆர்த்தியின் தற்போதைய பதிவில் யாருடைய பெயரும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால், அவர் உண்மையில் யாரைக் குறிப்பிட்டு இந்தப் பதிவை வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில், ஆர்த்தியின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருவதுடன், ரவி மோகனுடனான குடும்ப விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

விபரங்களுக்கு
மடியில் விழுந்த தொலைபேசியும் எழுந்த சர்ச்சையும் : ரம்யா கிருஷ்ணன் குறித்து கொந்தளிக்கும் இணையவாசிகள்!

மடியில் விழுந்த தொலைபேசியும் எழுந்த சர்ச்சையும் : ரம்யா கிருஷ்ணன் குறித்து கொந்தளிக்கும் இணையவாசிகள்!

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அமைச்சர் ராஜ்மோகனுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை எனக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வெற்றி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்வில் அமர்ந்திருந்த ரம்யா கிருஷ்ணன், அமைச்சர் வருகையின்போது எழுந்து நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே வணக்கம் தெரிவித்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து, பெண் யூடியூபர் ஒருவர் ரம்யா கிருஷ்ணனை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தக் காணொளி தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், வைரலான காணொளியின் முழுமையான காட்சிகளை சுட்டிக்காட்டிய சிலர், அமைச்சர் வருகையின்போது ரம்யா கிருஷ்ணன் எழ முயன்றதாகவும், அப்போது அவரது மடியிலிருந்த தொலைபேசி கீழே விழுந்ததாகவும் தெரிவித்து வருகின்றனர். தொலைபேசியை எடுத்த பின்னரே அவர் மீண்டும் அமர்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒருவர் காலின் மேல் கால் போட்டு அமர்வது அவரது தனிப்பட்ட நடைமுறை என்றும், அமைச்சர் என்பதற்காக ஒருவரை தெய்வீக நிலையில் கருதி மற்றொருவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, ரம்யா கிருஷ்ணனை விமர்சிக்கும் சிலரிடம், தமிழக முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால், ரம்யா கிருஷ்ணன் தொடர்பான இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் இருதரப்பு கருத்து மோதலாக மாறியுள்ளது.

விபரங்களுக்கு
பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு

பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு

திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் ஸ்வாகதா கிருஷ்ணன். தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ள அவர், ரிஷிகேஷில் தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் ஒருவர் தமக்கு அத்துமீறல் தொடர்பான துன்புறுத்தலை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். எனினும், அந்த நேரத்தில் குறித்த இசையமைப்பாளரின் பெயரை அவர் வெளியிடவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்னரே சென்னையில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த இசையமைப்பாளரை மீண்டும் குறிப்பிடும் வகையில் ஸ்வாகதா பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார். பல பெண்களுக்கு அத்துமீறல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அவர்களின் கண்ணியத்தையும் பணத்தையும் பறித்து, மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது சமூக வலைத்தளங்கள், சமூகத்தின் மனநிலை மற்றும் பி.ஆர். நடைமுறைகள் குறித்து நேர்காணல்களில் பேசி வரும் அந்த இசையமைப்பாளர், ஆன்மிக திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்த இசையமைப்பாளரை மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்ற சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்வாகதா, இதுபோன்ற செயல்களுக்கு சினிமாத்துறையே ஆதரவளிப்பதாக விமர்சித்துள்ளார். எனினும், தனது பதிவில் அவர் குற்றம்சாட்டும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை. இதையடுத்து, ஸ்வாகதா குறிப்பிடுவது யார் அந்த இசையமைப்பாளர்? என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்வாகதாவின் இந்த புதிய பதிவு தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

விபரங்களுக்கு
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!

நடிகர் அஜித் குமாரின் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. எனினும், அஜித்தை பாராட்டுவதற்காக இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்படவில்லை என்றும், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை ரசிகர்கள் சிலர் வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றூந்து பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடரும் வகையில் பல்வேறு சிற்றூந்து பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அஜித்தின் இந்த அறிக்கை அவரது ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “ரசிகர்களாக இருந்தது போதும்” உள்ளிட்ட கருத்துகளை சில ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், விஜய் ரசிகர்கள் அஜித்தின் அறிக்கையை வரவேற்றுள்ளதுடன், இருவருக்கும் இடையேயான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையைப் பாராட்டி வருகின்றனர். அஜித்தின் ஆதரவு முதலமைச்சர் விஜய்க்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்றும் சில விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், அஜித்தின் அறிக்கை தொடர்பான விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் இருதரப்பு வாதமாக தீவிரமடைந்து வருகிறது.

விபரங்களுக்கு
கே-பொப் வரலாற்றில் புதிய மைல்கல்: யூடியூபில் சாதனை படைத்த பேபிமான்ஸ்டர்!

கே-பொப் வரலாற்றில் புதிய மைல்கல்: யூடியூபில் சாதனை படைத்த பேபிமான்ஸ்டர்!

பிரபல கே-பொப் (K-Pop) பெண் இசைக்குழுவான 'பேபிமான்ஸ்டர்' (BABYMONSTER), தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் மொத்தம் 10 பில்லியன் பார்வை எண்ணிக்கையை (views) கடந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.வைய்ஜி என்டர்டெயின்மென்ட் (YG Entertainment) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியபடி, 2022 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல், வெறும் மூன்று ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களுக்குள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.இந்த மாபெரும் வெற்றியின் மூலம், கே-பொப் பெண் இசைக்குழு ஒன்று ஒற்றை யூடியூப் சேனலில் மிகக் குறுகிய காலத்தில் 10 பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் மற்றும் வேகமான குழுவாக பேபிமான்ஸ்டர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.மேலும், பிளக்பின்ங்க் (BLACKPINK) நிறுவனத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கே-பொப் பெண் குழுவும் பேபிமான்ஸ்டர் ஆகும்.இந்த சாதனைக்கு அவர்களின் புகழ்பெற்ற இசை காணொலிகள் மற்றும் உயர்தரத் திறமை வெளிப்பாட்டு காணொலிகள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன.பார்வைகளைப் போலவே அவர்களின் யூடியூப் சேனல் சந்தாதாரர்களின் (Subscribers) எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது, தற்போது அவர்கள் 13 மில்லியன் சந்தாதாரர்களுடன் கே-பொப் பெண் குழுக்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.இந்தச் சிறப்பான வெற்றியைக் கொண்டாடும் வேளையில், பேபிமான்ஸ்டர் குழுவினர் தற்போது தங்களின் பிரம்மாண்டமான '2026-27 BABYMONSTER WORLD TOUR [CHOOM]' உலகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

விபரங்களுக்கு
உலக அழகி 2026 கிரீடத்தைக் தட்டிச் சென்ற டொமினிகன் குடியரசு அழகி!

உலக அழகி 2026 கிரீடத்தைக் தட்டிச் சென்ற டொமினிகன் குடியரசு அழகி!

73-வது உலக அழகி (Miss World 2026) பட்டத்தை டொமினிகன் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் (joheirry Mola Dominguez) வென்றுள்ளார் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்ட இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் அனைத்துப் போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி அவர் 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் பட்டமளிக்கப்பட்டுள்ளார். இதில், கடுமையான போட்டியைக் கொடுத்த ஸ்பெயினின் எலிசபெத் ரெய்னஸ் (Elisabeth Reynes) இரண்டாம் இடத்தையும் (First Runner-up) மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தனுசியா செட்டி (Taanusiya Chetty) மூன்றாம் இடத்தையும் (Second Runner-up) பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.

விபரங்களுக்கு
திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!

திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி வரலாற்றில் முதல்முறையாக உலகளவில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 10.5% ஆக உயர்ந்துள்ளனர். இந்த நிலை மேலும் அதிகரித்து வரும் 2060ஆம் ஆண்டுக்குள் முதியவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக அதாவது 19.6% ஆக உயரும் என்றும் அதேவேளையில் குழந்தைகளின் எண்ணிக்கை 7% ஆக குறையும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

விபரங்களுக்கு
மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் - 'கிளாடியேட்டர்' முன்னோட்ட முன்பதிவில் வேகம்

மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் - 'கிளாடியேட்டர்' முன்னோட்ட முன்பதிவில் வேகம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், திரைப்படங்களைத் தொடர்ந்து சிற்றூந்து பந்தயத்திலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பங்கேற்ற சிற்றூந்து பந்தயங்களின் காட்சிகளைத் தொகுத்து, ‘கிளாடியேட்டர்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் முன்னோட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, முன்னோட்ட திரையிடலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், அஜித் ரசிகர்கள் மத்தியில் ‘கிளாடியேட்டர்’ முன்னோட்டத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும், முன்னோட்ட திரையிடல் மற்றும் ஆவணப்படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////