இந்திய கடப்பரப்பில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் படகில் தீ

Saturday, 03 January 2015 - 8:07

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்காக பிரவேசித்த பாகிஸ்தானிய படகு ஒன்று தீப்பற்றி எரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

குறித்த படகில் நான்கு தீவிரவாதிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகினை அடையாளம் கண்டு, இந்திய கடலோர கடற்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில் குறித்த படகு தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 26ம் திகதி இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் அங்கு தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips