துருக்கிய குண்டுவெடிப்பு - ஐ.எஸ்.ஐ.எஸ் மீது சந்தேகம்

Monday, 12 October 2015 - 20:45

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நேற்று முன்தினம் துருக்கிய தலைநகர் அங்காரா குண்டுத்தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பட்டதாக நம்ப முடியும் என துருக்கிய பிரதமர் அகமற் தவுரோக்லு தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தியோகபூர்வமாக மரணித்தவர்கள் 97 என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், முக்கிய குழுவொன்று 128 பேர் மரணமானதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை.
பலியானவர்களின் பெரும்பாலானவர்களின் ஜனாசா இன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips