அமெரிக்காவின் இரு மாகாணங்களில் சூறாவளி

Friday, 25 December 2015 - 15:44

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+
அமெரிக்காவின் தெற்கு பிராந்தியம் மற்றும் மிட்வெஸ்ட் மாகாணங்களை பாரிய சூறாவளி ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளனர்.

இது தவிர பல வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

பல விருட்சங்கள் வேருடன் சாய்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ள மிசிசிப்பி பிரதேசத்தை சென்றடைந்துள்ளனர்.

மிசிசிப்பி பிராந்திய ஆளுனர் அவசர கால நிலையினை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நந்தார் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த பலர் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips