ஈராக் தலைநகர் பக்தாத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களில் குறைந்த பட்சம் 69 பேர் பலியாகினர்.
நான்கு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று குண்டுகள் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் மாவட்டத்தில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories