இந்தியா, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது தடகள வீராங்கனை, மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இவர் தனது திறமையால் SAI -யின் முன்னணி வீராங்கனையாக உருவாகினார். ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடியுள்ள இவர், டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார். தற்போது காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ‘சாய்” முகாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு மழை நீரை சேமித்து வைக்கும் குளத்தின் வடிகால் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
இதுகுறித்து போபால் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடக்க விசாரணையில் இது ஒரு விபத்து என்று அவர்கள் தெரித்துள்ளனர்.
இவர் தனது திறமையால் SAI -யின் முன்னணி வீராங்கனையாக உருவாகினார். ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடியுள்ள இவர், டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார். தற்போது காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ‘சாய்” முகாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு மழை நீரை சேமித்து வைக்கும் குளத்தின் வடிகால் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
இதுகுறித்து போபால் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடக்க விசாரணையில் இது ஒரு விபத்து என்று அவர்கள் தெரித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories