சவுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்....

Monday, 01 August 2016 - 7:51

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D....
சவுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சவுதியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய அமைப்புகள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அமைச்சர் வி.கே. சிங்கை நேரடியாக சவுதிக்கு அனுப்பி, சிறப்பு விமானம் மூலம் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சவுதியை போல் குவைத்திலும் இந்தியர்கள் பலர் வேலை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips