பேருந்து மீது டிரக் வண்டி மோதி கோர விபத்து – 15 பாடசாலை மாணவர்கள் பலி....

Thursday, 19 January 2017 - 12:12

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+15+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF....
இந்தியா - உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது டிரக் வண்டி மோதிய விபத்தில் 15 பேர் வரை பலியாகிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் இன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தும், டிரக் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.

பாடசாலை பேருந்து பயணித்து கொண்டிருந்த போது எதிரே அதிக வேகத்தில் வந்த டிரக் வண்டி, பேருந்து மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பேருந்து விபத்தில் 15 மாணவர்கள் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேருந்தில் பயணம் செய்த பாடசாலை மாணவர்கள் அனைவரும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து காவற்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips