யுவதியொருவரை கடத்திய இருவர் கைது...

Tuesday, 20 June 2017 - 18:04

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
பிலியந்தலை , வெரலுகஸ்ஹந்திய பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த தனது காதலியை கடத்தி வீடொன்றில் அடைத்து வைத்து விடியும் வரை மந்திர தந்திர வேலைகள் செய்த இரண்டு இளைஞர்களை பிலியந்தலை காற்துறையினர் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய குறித்த பெண் கேகாலை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார்.

அவர் தொழில் நிமித்தம் பிலியந்தலையில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் , 21 வயது இளைஞரொருவருடன் குறித்த பெண் காதல் வயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிலற்ற குறித்த இளைஞர் , குறித்த பெண்ணிடம் அவரது தங்க ஆபரணங்களை அடகு வைப்பதற்காக கோரி வந்துள்ளார்.

இதை தொந்தரவாக கருத்திய குறித்த பெண் அவரின் தொடர்பை படிப்படியாக முறித்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் , குறித்த இளைஞர் அவரின் நண்பரான மந்திர தந்திர வேலைகள் செய்யும் நபரொருவருக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அவரின் ஆலோசனையின் பேரில் குறித்த இருவரும் இணைந்து , அந்த பெண் தங்கிருந்த விடுதிக்கு முச்சக்கரவண்டியொன்றில் சென்று பெண்ணை கடத்தியுள்ளனர்.

பின்னர் , வீடுடொன்றில் குறித்த பெண்ணை அடைத்து வைத்து விடிய விடிய எலுமிச்சை வெட்டியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் , விடுதியின் உரிமையாளர் காவற்துறைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வீட்டை சுற்றிவளைத்த காவற்துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

காதலி தன்னை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க இவ்வாறு எலுமிச்சை வெட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips